Wednesday, July 21, 2010

பரிணாமம் - மரபணுக்கள் (பகுதி-2)

மரபணுக்கள் பற்றியும், அவற்றில் நடைபெறும் செயல்கள் பற்றியும் நமக்கு ஒரு தெளிவு கிடைத்தால் மட்டுமே, அவைகள் தானாக உருவானவைகளா அல்ல எதோ ஒரு சக்தி திட்டமிட்டு உருவாக்கியதா என்ற தெளிவு கிடைக்கும். இப்பதிவில் நாம் பார்ப்பது மரபியல் பற்றிய ஒரு சிறிய விளக்கம்.

உயிரினங்கள் அனைத்தும் செல்களால் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே, இவற்றில் ஒரு செல் உயிரினங்களும் இருக்கின்றன பல செல் உயிரினங்களும் இருக்கின்றன. செல்களுக்குள் என்ன இருக்கின்றன என்பதை கீழே உள்ள விலங்கு செல் படத்தின் மூலம் காணலாம்.


செல்லின் உள் பல வகையான பொருட்கள் இருந்தாலும் நாம் இங்கே எடுத்துகொள்ளும் பகுதி உட்காருவே, அதில் தான் மரபு செய்திகளை தன்னகத்தே கொண்ட குரோமொசோம்கள் இருக்கின்றன. இந்த குரோமோசோம்கள் ஜோட்டி போன்ற பின்னிய அமைப்பில் இருக்கின்றன.


குரோமோசோம்கள் எண்ணிக்கை ஒவ்வொரு உயிரினத்திற்கும் மாறுபட்டு இருக்கும், மனிதனுக்கு இருப்பது 46, அவற்றில் 23,000 க்கு அதிகமான புரதத்தை (Protein) உருவாக்க கூடிய மரபுகள் (Genes) இருக்கின்றன. இவைகள் தான் மனிதனின் பரம்பரையாக வரக்கூடிய, தோற்றத்தை பற்றிய அனைத்து விதமான மரபுச்செய்திகளை (Genetic information) உள்ளடிக்கி இருக்கின்றன.

இந்த மரபின் (Gene) மொத்த அமைப்பிற்றுக்கு DNA (Deoxy Ribo Nuclic Acid) என்று பெயர். இவை Double Helix அமைப்பில் இருக்கும் (AT, GC என்று பின்னப்பட்டு இருப்பதை மேல் உள்ள படத்தில் காணலாம். இந்த மரபின் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலைக்கான செய்திகளை (Gene Coding) கொண்டுள்ளன.

உதாரணமாக கை, கால், தலை இவற்றின் வடிவம், அளவு ஆகியன. அனைத்து செல்லிலும் இவை அனைத்து செய்திகளும் இருந்தாலும் ஒவ்வொரு உறுப்புகளில் உள்ள செல்களில் அந்தந்த உறுப்புகளுக்கு தேவையான மரபுகள் மட்டும் செயற்படும். உடம்பில் உள்ள அனைத்தும் செய்திகளும் செயற்படக்கூடிய செல்கள் ஒரு குறுப்பிட்ட பகுதியில் தான் இருக்கும், அவைதான் குருத்தணு (Stem Cell). அவைகளை பற்றி விளக்கத்தையும் கீழே கொடுத்துள்ளேன்.


இந்த DNA க்கள் நான்கு வகையான அமிலத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. அவையாவன: Adenine, Guanine, Thymine and Cytosine. இவற்றை சுருக்கமாக A T G C என்று கூறுவார்கள், அனைத்தும் கார்பன் மூலக்கூருகளால் AT, GC என்ற அமைப்பில் பிணைக்கப்பட்டுள்ளன. 13 வருடங்கள் உழைப்பிற்கு பிறகு மனிதனின் உடம்பில் உள்ள அனைத்து மரபுகளும் தொகுக்கப்பட்டு விட்டன, இவற்றிற்கு பெயர்தான் (HGP – Human Genome Project) ஆகும். அதேபோல மற்ற விலங்குகளின் மரபுகளும் தொகுக்க பட்டு வருகின்றன. இவற்றை தொடர்பு படுத்தி பார்ப்பதன் மூலமே அந்த உயிரினங்களுக்கு இடையே உள்ள வேற்றுமையை காணலாம், மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் இடையே உள்ள 96% ஒற்றுமையை இதை வைத்தே கண்டறிந்தனர்.

இந்த DNA க்கள் தங்களை transcription என்ற ஒரு வகையான வேதி வினைக்கு உட்படுத்தி RNA அமிலங்கள் உருவாகின்றன பிறகு இவைகள் translation என்ற மற்றொரு வேதி வினைக்கு உட்படுத்தி புரதங்கள் உருவாகின்றன. மரபுகள் எப்படி செய்திகளை கொண்டுள்ளதோ அதை போல அந்த உயிரினத்தை கட்டமைப்பு செய்யும் வேலையில் புரதங்கள் (Protein) தான் இருக்கின்றன. அமினோ அமிலத்தின் (Amino acid) கடின கட்டமைப்பை (complex structure) கொண்டவைகள் தான் இந்த புரதங்கள்.

குருத்தணுக்கள் (Stem Cells):

தற்போது அதிகமாக கவனம் செலுத்தப்படும் துறை இந்த குருத்தணு ஆராய்ச்சி துறையே (Stem Cell) ஏனெனில் மனிதனிடம் உள்ள அனைத்து நோய்களுக்கும் இதில் தீர்வு இருக்கு என்று நம்புவதே.


குருத்தணு என்பது ஆணின் அண்டமும் (Sperm) பெண்ணின் கருமுட்டையும் (Gametes) இணையும் பொது கருவில் உருவாகும் ஒரு வகை செல்களே, இந்த செல்களின் சிறப்பு என்னவெனில் இவைகள் மற்ற செல்களை (Replication) உருவாக்க கூடியவை மேலும் ஆணின் 23 குரோமோசோம்களும் பெண்ணின் 23 குரோமோசோம்களும் இதில் முழுமையாக இருப்பது தான். அதாவது மனிதனின் முழு அமைப்பும் கொண்ட மரபு இதில் பதிய பட்டுள்ளதே காரணம்.

இவைகளை இரு வகையாக பிரிகின்றனர், முதல் வகை முளைய குருத்தணுக்கள் (Embaryo Stem Cells) கருவுறும் பொது உருவாககூடியவை, மற்றொன்று வளர்ந்த குருத்தணுக்கள் (Adult Stem Cells) கரு வளர்ச்சி அடைந்த பிறகு உருவாகக்கூடிய குருத்தணு.

குழந்தையின் தொப்புள் கொடி (umbilical Cord Blood) ரத்தத்தில் இந்த செல்கள் இருப்பதால் தான் அந்த ரத்தத்தை சேகரிக்க தனி ரத்த வங்கிகள் செயல்படுகின்றன. இந்த குருத்தணுக்களை சேகரித்து வைப்பதால் புற்றுநோய் போன்ற மரபு சார்ந்த வியாதிகளுக்கும் மருந்தாக அமையும் என்று மருத்துவ உலகம் எதிர்பார்க்கிறது. மேலும் இந்த குருத்தணுக்கள் மரபணு திருத்தம் செய்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆக முழு உயிரின் உருவமும், பரம்பரை குணங்களும் ஒரு சிறு கண்ணுக்கு தெரியாத செல்லில் தான் உள்ளது என்பதே இப்பதிவின் கரு.

மனித உருவம் உருவாக்கப்பட்டு அதற்கான மரபணு உருவானது என்பது மதங்களின் கோட்பாடு, முதலில் மரபணு உருவானது பிறகுதான் மனித உருவம் வந்தது என்பது நாத்திக கொள்கை.

முதலில் மரபணு வந்து இருந்தால் உருவம் விகாரமாக கூட இருந்திருக்கலாம், யாருக்கு தெரியும் இந்த மரபணு விற்கு இந்த உருவம் தான் என்று, எப்படி இவ்வளவு கச்சிதமாக அமைய பெற்றது, தேவையான உறுப்பு தேவையான இடத்தில்?? நாத்திகர்களே!! இதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன??

நீங்கள் இதில் எதை நம்பினாலும் நம்பாவிட்டாலும் இவைகள் தானாக உருவாகவில்லை, உருவாக்கப்பட்டன என்பதை நம்பித்தான் ஆக வேண்டும.

மனித உருவத்தை பற்றிய சிறப்பு விஷயங்களுடன் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

Post Comment

4 Comments:

வால்பையன் said...

ஒரு செல்லில் ஏற்படும் இயற்கையான மாற்றம் பரிணாமத்திற்கான ஆதாரம் தானே! அவ்வாறு ஏற்பட நிறைய சாத்தியகூறுகள் இருக்கின்றன என்பது உண்மை தானே!

Unknown said...

மாற்றங்கள் இயற்கையாக ஏற்படுவது இல்லை, சில மரபு தவறுகளால் ஏற்படுகிறது,
உதாரணம் வேண்டுமெனில், ஒரு கணினி ப்ரோக்ராம் எடுத்து கொள்ளுங்கள், அந்த கோடிங்கில் அதை பற்றி நன்கு அறிந்தவர் மட்டும் தான் மாற்றம் செய்ய முடியும், அந்த கோடிங்கில் சிறு தவறு வருமாயின் அது வேறு ஒரு ப்ரோக்ரமாக மாறாது வேலை செய்வதில் தவறு ஏற்படும், அதே போல தான் மனித மரபு கோடிங்கும்.

Anonymous said...

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Anonymous said...

மரபணு மட்டுமே மனிதனின் உறுப்புகளை தீர்மானிக்கிறது.சரி, மாற்றுத்திறனாளிகளை எப்படி தீர்மானிக்கிறது, உங்கள் கடவுள்?? அட போங்கையா இல்லாத கடவுளுக்கு இவ்ளோ வக்காலத்து

Post a Comment