Wednesday, November 10, 2010

பரிணாமம் - அதிசய மனிதன் (பகுதி-7)

பரிணாமம் ஒரு கட்டுக்கதை என்பதை நிரூபிக்க மனிதனுக்கு மனிதனை பற்றிய சிந்தனை இருந்தால் மட்டுமே போதுமானது.

Missing link, இதை பற்றி பலரும் சொல்ல கேள்வி பட்டிருப்பீர்கள், உதாரணமாக ஒன்று என்பது ஒழு முழுமையான எண், பத்து என்பது மற்றொரு முழுமையான எண், ஒன்று பத்தாக பரிணாமம் அடைய வேண்டுமெனில் அது இரண்டு மூண்டு.......ஒன்பது என்ற படி நிலையை கடந்து தானே பத்து என்ற நிலையை அடைய முடியும்.

ஒன்று என்பதை குரங்காகவும் பத்து என்பதை மனிதனாகவும் வைத்து கொண்டால், பரிணாம வாதிகளின் கொள்கை படி இந்த ஒன்று என்பது இரண்டு மூன்று நான்கு என்று பல கோடி வருடங்கள் பரிணாமம் பெற்று பத்தை அடைய வேண்டும். ஒன்று, இரண்டு மூன்று என அனைத்து உயிரினங்களின் உடலும் புதைக்க பட்டிருக்கும்.

ஆனால் இன்று வரை காண கிடைப்பது குரங்கின் படிமம், அல்லது மனிதனின் படிமம், இடைப்பட்ட மனிதனுக்கு முந்தைய வேறு வேறு உயிரினங்களின் படிமம் (Transitional Fossils) தொடர்ந்து காணவில்லை, இதையே missing link is still missing என்று கூறுவார்.


இப்படி இருக்க பரிணாமம் உண்மையெனில் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? பாம்பு திடிரென ஒரே நாளில் பறவையாக மாறி இருக்க வேண்டும், பறவை திடிரென மற்றொரு உயிராக மாறி இருக்க வேண்டும். குரங்கு திடிரென மனிதனாக மாறி இருக்க வேண்டும். அப்படி மாறுகிறது என்பதை பரிணாம வாதிகள் ஏற்று கொள்வார்களா? இருப்பினும் அனைத்து உயிரினங்களும் முழுமை பெற்றே உள்ளன. சரி மனிதனுக்கு வருவோம்.

அனைத்தும் எதோ முடிவு எடுத்து வைத்தார் போல, ஆணின் விந்தணுவிற்காக (Sperm) காத்திருக்கும் பெண்ணின் கரு (Egg), விந்தணுவிற்கு 72 மணி நேர ஆயுள், கரு முட்டைக்கோ 24 மணி நேர ஆயுள், இரண்டும் 24 மணி நேரத்துக்குள் இணைய வேண்டும் அடுத்த சந்ததியை உருவாக்க, யார் கற்றுகொடுத்ததோ தெரியவில்லை அந்த விந்தணுவிற்கு மனிதன் உருவாக தேவையான பாதி செய்தியை தலையில் வைத்து (X அல்லது Y ஏதாவது ஒரு குரோமோசோமுடன்) நீந்தி கொண்டு கோடிக்கணக்கான அணுவில் ஒன்று மட்டும் பெண்ணின கருவை வெற்றிகரமாக அடைகிறது, மனிதன் உருவாக மறு பாதி செய்தியுடன் (X குரோமோசோம்) அந்த கரு முட்டை விந்தணுவின் வரவை எதிர் பார்த்து காத்திருக்கிறது.


இந்த மனித வளர்ப்பை தாயின் கருப்பை செய்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் மார்பகங்கள் பிறக்க போகும் குழந்தைக்கு பால் தருவதற்காக தன்னை தயார் படுத்தி கொள்ளும் வேளையில் உள்ளது, என்ன ஒரு வியப்பு குழந்தை பிறக்கிறது அன்னையின் மார்பகங்கள் பால் தருவதற்கு தயார் நிலையில் உள்ளது.

பிறந்த குழந்தைக்கு உணவு என்றால் என்னவென்றே தெரியாது ஆனாலும் தாய் மார்போடு அணைக்கிறாள் குழந்தை பாலை உறிஞ்சி குடிக்கிறது. எதுவுமே தெரியாத குழந்தை ஒவ்வொன்றாக கற்று வளர்கிறது, அனைத்து உறுப்புகளும் வளரும் போது பற்கள் மட்டும் வளர்ந்து கொட்டி விடுகிறது (Child Teeth), பிறகு புது பற்கள் (Adult Teeth) முளைக்க ஆரம்பிக்கிறது அவன் வளர்ந்தான் என்பதற்காக.

அனைத்து பாகங்களும் இருக்க வேண்டிய இடத்தில் தேவையான அளவில், அனைத்திலும் மனிதனுக்கு அளவிட முடியாத போக்கிசங்களில் குறுப்பிடதக்கவை கண்கள் (Eyes) மற்றும் மூளை.

மனிதனின் கண் 70 லட்சம் (~) வண்ணங்களை (Colors) பிரித்து அறிய கூடியது, வண்ணங்கள் என்பது வேதியியல் மூலக்கூருகளால் உருவாக்கப்பட்டது என்றும் அறிவியலாளர்கள் கூறுவார். ஆனால் நமக்கு தெரிந்த வண்ணம் பிறர்க்கு வேறு ஒரு வண்ணமாக கூட தெரியலாம், ஆம் கண்ணில் இருக்க கூடிய கூம்புகள் தான் நமக்கு வண்ணங்களை உருவாக்குகின்றன, இந்த வண்ணங்களை நமது கண்களுக்கு கொடுத்தது எது? வண்ணத்திற்கும் உயிரினங்களுக்கும் என்ன சம்பந்தம், உயிர் வாழ வண்ணங்கள் தேவையே இல்லை, பல லட்ச வண்ணங்களை பிரித்து அறிய கூடிய ஆற்றலை இந்த கண்களுக்கு யார் தந்தது. உதாரணமாக ஒரு பச்சை வண்ணம் இருக்கிறது என்றால் அது பச்சை வண்ணம் என்பதை முன்னமே நாம் அறிந்திருந்தால் மட்டுமே அதை பச்சை வண்ணம் என்று கூற முடியும், எதுவுமே அறிய காலத்தில் அந்த வண்ணத்தை பச்சை வண்ணமாக எவ்வாறு நமது கண்கள் எடுத்து கொண்டன. உயிரினங்கள் பரிணாமம் அடைந்திருந்தால் அனைத்து பொருளும் ஒரே மாதிரியாக இருந்திருக்குமே தவிர வண்ணங்கள் வந்திருக்காது.

மூளை, இதன் வியத்தகு ஆற்றல் அளவிட முடியாதது, உடலில் உள்ள அனைத்து பாகங்களை விடவும் வித்தியாசமான நம்ப முடியாத ஆற்றல் கொண்ட பாகமாகவும், மனிதனுக்கு சுயமாக சிந்திக்க கூடிய ஆற்றலை உடையதாகவும் மூளை உள்ளது. நொடி பொழுதில் லட்சக்கணக்கான செய்திகளை செயல் படுத்துகிறது, பார்க்க கூடிய அனைத்து வண்ணங்களையும், பொருள்களையும் நினைவில் வைத்து கொள்ள கூடியது, உங்களை சுற்றி உள்ள சப்தம், தட்ப வெப்ப நிலை, கோபம், சுகம், துக்கம், சிரிப்பு போன்ற உணர்வுகள், மற்றும் அதையும் சேமித்து வைத்தல், அதே சமயம் உடலின் தலை முதல் கால் வரை என்னென்ன நிலைகளை உடல் சந்திக்கிறது, தற்காப்பு என அனைத்து வேலைகளையும் மூளை சேமித்து செயல்படுத்துகிறது.

நாம் ஒரு பொருளை பார்க்கும் பொழுது நுண்ணிய நரம்புகள் (Nervous) கண்கள் பார்க்கும் செய்தியை மூளைக்கு எடுத்து செல்கின்றது, மூளை அதன் தூரதிற்கேட்ப அதன் அளவை நமக்கு காண்பிக்கிறது, ஒரு பொருளை நீங்கள் அதே அளவில் கண்டால் என்ன ஆகும், அனைத்து பொருள்களையும் நம்மால் காண முடியாது, கண்கள் இருந்தும் இல்லாதது போலவே, ஆக மனிதனின் தேவை என்னவென்று உணர்ந்தே இவைகள் மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த கண்ணும் மூளையும் எங்கிருந்து வந்தது எப்படி வந்தது என்பதற்கு விளக்க முடியாதவாரே இந்த பரிணாம கொள்கை உள்ளது. ஒரு உயிரற்ற பொருளிருந்து வந்த ஒன்றிற்கு மூளை போன்ற ஒரு வியத்தகு ஆற்றல் கொண்ட ஒரு உறுப்பு உருவாக சிறிதேனும் வாய்ப்பு உள்ளதா என்பதை பரிணாம வாதிகள் சிந்திக்க வேண்டும். தானாக உருவான மனிதனுக்கு அவனே அறியாத அவனுடைய தேவைக்கேற்ப யார் இந்த கண், மூளையின் திறனை மாற்றியது.

மனிதனுடைய ஒவ்வொரு உறுப்பும் கடவுளின் தெளிவான செய்திகளை மனிதனுக்கு விளக்க கூடியதாக உள்ளது, இரத்தத்தை சுத்தம் செய்வதற்கென ஒரு உறுப்பு (Heart), உணவை செரிக்க வைக்க (Intestine), பார்க்க (View), கேட்க (Listen) என அனைத்து வேலைகளுக்கும் தனி தனி உறுப்பு. அது மட்டுமல்லாமல் தங்களுக்குள் ஒரு ஒழுங்கு முறையை கொண்டுள்ளன. இரண்டு கண்களுக்கும் இடையில் ஒரு கண் இடைவெளி, மெல்லிய கண்களை பாதுகாக்க இமைகள், நெற்றியின் உயரமும் மூக்கின் நீளமும் அளந்து வைத்தாற்போல, இரண்டு காதுகளின் அளவு என அனைத்தும் கனகச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது, உள் பகுதியில் இரத்தம், நரம்பு, சதை என பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்த பட்டாலும் பார்வைக்கு மிகவும் அழகை தர கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உலகில் உள்ள அத்தனை கோடி மனிதர்களுக்கும் ஒரே மாதிரியாக. நாத்திகம் பேசுபவர்களே இவை அனைத்தும் நடப்பது ஒரு அர்த்தம் இல்லாமலா? கோடான கோடி நட்சத்திரம், கிரகங்கள் இருந்தும் பூமியில் மட்டும் இப்படி நிகழ்வது காரணம் இல்லாமலா?

பல மில்லியன் வருடங்களில் இவைகள் நடக்கலாம் என்ற குருட்டு நம்பிக்கையை விட்டு விட்டு, ஒரு உயிரினம் அதன் வாழ்நாளில் (ஐம்பது வருடங்கள் வைத்து கொள்ளுங்கள்) என்ன மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது என்று சிந்தித்து பாருங்கள், மனிதன் தானாக உருவானவனா அல்லது அதீத சக்தியால் உருவாக்க பட்டவனா என்பது விளங்கும். இதில் இருக்கும் உண்மைகளை அறிந்தாலே பரிணாமம் என்பது பொய் என்பதையும் கடவுள் என்ற மாபெரும் சக்தி இருப்பதையும் அறிவீர்கள்.


இப்பதிவின் மூலம் பரிணாம வாதிகளிடம் கேட்கப்படும் சில நியாயமான கேள்விகள்:

அனைத்தையும் உருவாக்க கூடிய கருப்பையை யார் உருவாக்கியதோ, பிறக்க போகும் குழந்தைக்கு பால் தேவை என்பதை தாயின் மார்பகத்திற்கு யார் சொல்லி கொடுத்ததோ, குழந்தை பற்கள் விழுந்து வாலிப பற்கள் (Adult Teeth) முளைப்பது யாரால்?

பேசுதல், காதில் கேட்டால் என்றால் என்னவென்று தெரியாமலேயே பேசுவதற்கு வாயும் கேட்பதற்கு காதுகளும் உருவாகுமா?

சிந்தித்தல் என்றால் என்ன வென்று தெரியாமலேயே சிந்திப்பதற்காக மூளை தேவை என்பதை பரிணாமம் முன்கூட்டியே எப்படி அறிந்து கொண்டு மூளையை உருவாக்கியது?

கண்கள், நரம்புகள் மற்றும் விந்தணுவில் செய்திகள் போன்ற விசித்திரமானவைகள் தானாக உருவாக ஒரு சதவிகிதமேனும் சாத்தியம் இருக்கிறதா?

பரிணாமவாதிகள் இவற்றை நேர்கொண்ட பார்வையில் விளக்குவார்களா??

References:

http://health.howstuffworks.com/human-body/systems/nervous-system/brain.htm
http://bsnprogram.com/2010/50-incredibly-weird-facts-about-the-human-body/
http://wiki.answers.com/help/asking_question
http://www.youtube.com/watch?v=ySw0RVO3dwI
http://www.abc.net.au/science/photos/mathsinnature/blank.htm
http://hypertextbook.com/facts/2006/JenniferLeong.shtml

Post Comment

18 Comments:

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சுபானல்லாஹ். உங்களுக்கு இறைவன் மென்மேலும் கல்வி ஞானத்தை தந்தருள்வானாக...ஆமின்.

குரங்கு போன்ற ஒன்றிலிருந்து இன்றைய மனிதன் வந்ததற்கு ஆதாரங்களாக Australopithecus, h.habilis, h.erectus etc போன்றவை காட்டப்படுகின்றன. ஆனால் இவற்றில் பல குழப்பங்கள் உள்ளன. இவைகள் ஒன்று அழிந்த குரங்கினமாகவோ, இல்லை தற்போதைய சிம்பன்சிகளை ஒத்த இனமாகவோ அல்லது மனித இனமாகவோ உள்ளன.

குரங்கு போன்ற உயிரினத்திற்கும் மனிதனுக்கும் இடையேயான transitional form இதுவரை கிடைத்ததாக எனக்கு தெரியவில்லை. கிடைத்த ஒன்றும் மோசடி (Piltdown man) என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.

உங்களுடைய கேள்விகளுக்கு பரிணாம ஆதரவாளர்களின் பதில்களை நானும் ஆர்வமுடன் எதிர்ப்பார்க்கின்றேன்...

சகோதரத்துவத்துடன்,
ஆஷிக் அஹ்மத்

அரபுத்தமிழன் said...

சகோதரர் ஆஷிக்கின் அறிமுகத்திற்கு நன்றி.
நல்ல பயனுள்ள ப்லோக். முழுதும் படித்த பின்
வருகிறேன் இன்ஷா அல்லாஹ்.

வஹ்ஹாபி said...

அருமையான ஆய்வும் விளக்கங்களும்.

பாராட்டுகள், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்!

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர் கார்பன் கூட்டாளி,
வஹ்ஹாபி அண்ணன் சொன்னது போன்று ஆய்வுகளும் விளக்கங்களும் அருமை. கேள்விகள் ஒவ்வொன்றாக அழகாக முன்வைத்திருக்கிறீர்கள். பரிணாமவாதிகள் திறந்த மனதுடன் இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் பதில் கொடுப்பார்களா என்பது சந்தேகமே.

வலையுகம் said...

நன்றி கார்பன்கூட்டாளி அவர்களே
அருமையான பதிவு ஒங்கள மாதிரி ஆட்கள் மனசு வச்சு
தமிழில் இது போன்று எழுதினால் தான்
என்னைப் போன்ற பாமரர்கள் நாலு விஷயங்கள
தெரிஞ்சுகிற முடியும்
நன்றி நன்றி நன்றி

Unknown said...

புதிதாக வருகை தந்த நண்பர் அரபுத்தமிழன் மற்றும் வஹ்ஹாபி அவர்களுக்கு வருக வருக.

பதிவில் தரப்பட்டுள்ள கிளிப் என்னை முகவும் கவர்ந்தது, பார்க்காதவர்கள் அதை பார்த்தால் அதிக விளக்கம் பெறலாம்.

Anonymous said...

குரங்கு மனிதனாக மாறியிருந்தால் மனிதன் என் இன்னும் ஏதோவாக மாறவில்லை

G u l a m said...

நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக
அருமையான பதிவு., அதுவும் கண்கள் குறித்து
//வண்ணத்திற்கும் உயிரினங்களுக்கும் என்ன சம்பந்தம், உயிர் வாழ வண்ணங்கள் தேவையே இல்லை //
நூறு சதவீகிதம் உண்மையான வார்த்தை ஏனெனில் வண்ணங்களை பச்சோந்தி போன்ற உயிரினங்கள் மட்டுமே தன் பாதுக்காப்பிற்காக பயன்படுத்துகின்றன. அதை தாண்டி ஏனைய எல்லா உயிரினமும் பாதுகாப்பிற்காக அஃது வண்ணங்களை பயன்படுத்துவதில்லை ஆக சுய தேவை அடிப்படையில் வண்ணங்கள் பச்சோந்தி போன்ற உயிரினங்களுக்கு மட்டுமே தனித்து வழங்கப்பட்ட பிரத்தியேக ஏற்பாடு. எனும்போது எந்த ஒரு உயிருக்கும் அவைகளின் செயலாற்றலுக்கு தகுந்தாற்ப்போல தனித்தனி இயல்புகளுடன் பிரத்தியேகமாகவே வண்ணங்கள் படைக்கப்பட்டிருப்பது தான் உண்மை.ஏனெனில் பரிணாம வளர்ச்சியின் விளைவால் உயிர் வாழ வர்ண வேறுபாடுகள் என்பது அவசியமல்லாத ஒன்று.

Unknown said...

பச்சோந்தி என்பதையே பரிணாமத்தை பொய் படுத்த சிறந்த உதாரணமாக எடுத்து கொள்ளலாம். அது வண்ணத்தை மாற்றுகிறது என்பதே அனைவரும் அறிந்தது.

பச்சோந்தியின் தோலின் மேல் அடுக்கு சிவப்பு, மஞ்சள் நிறங்களை கொண்டது, அதற்கு கீழ் உள்ள அடுக்கு நீலம் மற்றும் வெள்ளை நிறத்தை கொண்டது,அதன் மூளை அதன் செல்லிற்கு செய்தி அனுப்பும் போது அந்த செல்கள் சுருங்கி விரிந்து அதன் வண்ணத்தை மாற்றுகிறது.

பச்சோந்தி அதன் சுற்று சூழலுக்கு ஏற்றார்போல மட்டும் அதன் நிறத்தை மாற்றவில்லை, தன்னுடைய ஜோடியை கவரவும் அதை பயன்படுத்துகிறது.

இதற்கு பரிணாம வாதிகளின் விளக்கம்?

வால்பையன் said...

நேரம் இல்லாததால் தொடர்ந்து பரிணாமம் தொடர் எழுத முடியாமல் இருந்தது, உங்கள் பதிவு அதை தொடர உத்வேகத்தை அளிக்கிறது, நன்றி நண்பரே!

டிலீப் said...

அருமையான பதிவு வாழ்த்துக்கள்

டெலிபதி என்கிற சிந்தனை பரிமாற்றம்
http://dilleepworld.blogspot.com/2010/11/1_20.html

Unknown said...

புதிதாக வருகை புரிந்த டிலிப் அவர்களுக்கு வருக வருக. தொடர்ந்து படியுங்கள்.

SAR Designs said...

Assalamu Alaikum,

Your Article is very Nice.

Abdurrahman

Anonymous said...

Assalamu Alaikum,

Your Article is very Nice.....May Allah Bless You....

Abdurrahman

Unknown said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு அப்துர் ரஹ்மான், தொடர்ந்து படியுங்கள்.

Rajasankar said...

பரிணாமம் இன்றும் எவ்வாறு நடக்கிறது என எழுதியுள்ளேன் படித்து பார்த்துவிட்டு பதிலளியுங்கள். http://rajasankarstamil.blogspot.com/2010/11/blog-post.html
பரிணாமம் நேற்றும் நடந்தது. இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும்.

அறிவிலி said...

அஸ்ஸலாமு அலைக்கும் ..

என்ன கார்பன் ?.. அறிவியலுக்குலாம் போய் பேசுறீங்க ...

மேலே ராஜா சங்கர் பதிவு போட்டிருக்கார் பாருங்க .
1 டு 10 நு கதை எல்லாம் விடுறீங்க .. மனிதனுக்கு முந்தைய நிலை தான் குரங்கு போன்ற உருவம் கொண்ட மனிதன். ஆக மனிதன் 10 எனில் டார்வின் சொன்ன குரங்கு போன்ற மனிதன் 9 ஆவது நிலை.

சரி .. அல்லா மண்ணிலிருந்து மனுசனை செஞ்சாராமே ?.. பாலையும் கரு முட்டையையும் எத வச்சு செஞ்சாரு ?..

அறிவியலைப் பத்தி பேசுறதுக்கு முன்னாடி நாம எந்த அளவுல இருக்கோம்னு பாத்துட்டு பேசுங்க ..

Unknown said...

வ அலைக்கும் அஸ்ஸலாம்.

//என்ன கார்பன் ?.. அறிவியலுக்குலாம் போய் பேசுறீங்க ... //

தவறிருந்தால் சுட்டி காட்டவும்.

//மேலே ராஜா சங்கர் பதிவு போட்டிருக்கார் பாருங்க .//

முன்பே அறிமுகமானவர். அவர் பரிணாம எதிர்ப்புவாதிகளின் ஆரம்பப நிலையில் உள்ள பதில்களுக்கு மறுப்பு எழுதி கொண்டிருக்கிறார்,அவர் தற்காலத்திற்கு வரும் போது பதிலளிக்கப்படும்.

//சரி .. அல்லா மண்ணிலிருந்து மனுசனை செஞ்சாராமே ?.. பாலையும் கரு முட்டையையும் எத வச்சு செஞ்சாரு ?.//

நான் அறிந்திருக்கவில்லை தெரிந்தால் பதியவும்.

//அறிவியலைப் பத்தி பேசுறதுக்கு முன்னாடி நாம எந்த அளவுல இருக்கோம்னு பாத்துட்டு பேசுங்க ..//

உங்கள் கருத்தில் ஆதங்கம் தான் தெரிகிறது, ஏதேனும் நியாயமான குறுக்கு கேள்வி இருந்தால் கேளுங்கள்.பதிலளிக்கிறேன்.

Post a Comment