Sunday, December 18, 2011

மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு (The Central Dogma of Molecular Biology)

மனிதன் வடிவமைக்கபட்டானா அல்லது பரிணாமம் அடைந்தானா?


உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி நிலவட்டுமாக.

மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு (The Central Dogma of Molecular Biology) என்பது உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன, செல்களில் உள்ள குரோமோசோம்களில் உள்ள மரபுகள் (Genes) எப்படி தன்னுடைய பயணத்தை தொடர்கிறது என்பதை பற்றிய உள் நுழைந்த பதிவு. இதன் மூலம் உயிரிகளின் அடிப்படை விசயங்களையும் வளர்ச்சிதை மாற்றத்தையும் மிக தெளிவாக அறிந்து கொள்ளலாம். 

உயிரி தொழிற்நுட்பம் (Bio technology) படிப்பவர்களுக்கு இந்த கோட்பாட்டின் ஆழம் தெரிந்திருக்கும் எனினும் அனைத்து தரப்பினரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகவே இந்த மைய கோட்பாடு உள்ளது என்பதனால் முடிந்த அளவு இலகுவாக தர முயன்றிருகின்றேன், பரிணாமம் பற்றிய சில யூகங்களை விளக்குவதாகவும் இது அமையும் என நம்பிக்கையுடன் தொடருகிறேன். 

பதிவிற்கு செல்வதற்கு முன்பு, சில முக்கிய தொழிற்நுட்பம் சம்பந்தமான குறிச்சொற்களை (Technical words) அறிந்துகொள்வது அவசியமானது. 

A – Adenine , C – Cytocine, G – Guanine, T – Thymine, U – Uracil 

(இவைகள் எல்லாம் Basepairs – வேதியியல் மூலக்கூறுகள்) 

Nuclic acid - நுயுக்ளிக் (மைய) அமிலம் 

DNA – DeoxyRibo Nucleic acid – A, C, G, T மூலக்கூருகளால் பிணைக்கபட்டிருக்கும் 

RNA – Ribo Nucleic acid – A, C, G, U மூலக்கூருகளால் பிணைக்கபட்டிருக்கும் 

Gene – மரபு (குறிப்பிட்ட DNA க்கள் சேர்ந்தது, நம்முடைய செயல்பாடுகள், உடலமைப்பு என அனைத்திற்கும் மூல ஆதாரம், ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு மரபு காரணம்) 

Protein – புரதம் (மரபிலிருந்து உருவாகக்கூடியது) 

Amino Acid - அமினோ அமிலம் (புரதத்தின் உள் உள்ளது)


Chromosome – குரோமோசோம் (பல மரபுகள் சேர்ந்தது, ஒரு ஜோட்டி வடிவத்தில் இருக்கும்) 

Cells – செல்கள் (மேலே கொடுக்கப்பட்ட அனைத்தையும் கொண்ட ஒரு கட்டமைப்பு) 

Organ – உறுப்புகள் (புரதத்திளிருந்து உருவாகக்கூடியது) 

Sequence – கணினி புரோக்ராமிற்கு ஒத்தது - மரபுகளை கணினியின் உதவியுடன் ஆராய்வதற்கு உருவாக்கப்பட்டது. ( DNA, RNA Sequence – A, T, G, C, U and Protein Sequence – A,B,C… (20 basepairs))



வெற்றிகரமாக நடைபெறும் ஆண் பெண் விந்தணு கருமுட்டையின் சேர்க்கையால் அடுத்த சந்ததி உருவாக ஆரம்பிக்கும், அதன் பிறகு முதல் செல்லில் நடைபெறக்கூடிய மைய நிகழ்வுகளையே தற்போது நாம் காண போவது.



நாம் பார்த்த அறிந்தவற்றை விட செல்களில் நடைபெற கூடிய செயல்கள் மிகவும் ஆச்சரியமானவை. மூலக்கூற்று உயிரியலின் மைய கோட்பாடு செல்லில் (Cell) நடைபெறக்கூடிய முக்கியமாக இரண்டு நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது, Transcription and Translation என்பவை தான் அவை.

1) குரோமோசோம்களில் உள்ள DNA வை RNA polymerase எனும் அமைப்பு RNA வாக மாற்றுவது Transcription எனப்படும், இது முதல் முக்கிய நிகழ்வு.

2) இதன் பிறகு இந்த RNA வை செல்லில் உள்ள ரிபோசொம் (Ribosome) எனப்படும் ஒரு அமைப்பு புரதமாக (Protein) மாற்றும் இந்த நிகழ்வை Translation என கூறுவர், இது இரண்டாவது நிகழ்வு. 

(படத்தை காண்க, முதல் நிகழ்வில் போது RNA வாக மாற்ற பட்ட இந்த மரபுகள் திரும்பவும் DNA வாக ஒருபோதும் மாறாது. ஆனால் சில வைரஸ்கள் RNA விலிருந்து DNA வாக மாறும், அதாவது எய்ட்ஸ் (AIDS – Acquired Immuno Deficiency Syndrome) நோயை உருவாக்க கூடிய HIV க்களும் தலை கீழாக மாற கூடியவை, இந்த வினைக்கு Reverse Transcription என்று கூறுவர். இதன் காரணமாகவே எய்ட்ஸ் நோய்க்கு இது வரையில் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை, புற்றுநோய் (Cancer), காச நோய் (Tuberculosis) ஆகிய நோய்களுக்கு இது வரையில் மருந்து கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட சிரமத்திற்கு காரணம் இந்த நோய்கள் மரபுகள் சார்ந்து இருப்பதும் மனிதனின் அடிப்படை மூலப்பொருளான இந்த மரபுகளையே தாக்குவதும் தான்).


புரதம் பின்பு மற்ற அனைத்து உறுப்புகளும் உருவாக மூலகாரணமாக உள்ளது, இது உயிரினத்தின் வாழ்க்கை சுழற்சியில் செல்லில் நடைபெற கூடிய அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகள். 

DNA என்பது double helix எனப்படும் ஒரு சிக்கலான அமைப்பை கொண்டது, DNA தன்னை தானே மீள்பதிவு எடுத்து கொள்வது DNA Replication எனப்படும், மரபு காப்பி (Copy) எடுப்பது என்று கூறுவர், கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போன்று A என்பது T உடனும், G என்பது C உடனும் கெட்டியாக பிணைக்கப்பட்டிருக்கும்.

A, T, C, G, U இவைகள் எல்லாம் மூலக்கூறு அமிலங்கள் இதற்கும் உள்ளேயும் சென்று ஒரு உயிரினத்தை அக்கு அக்காக பிரித்தால் கடைசியில் மிஞ்சுவது வேதியியல் மூலக்கூறுகள் அவைகளில் கார்பன் (Carbon) மூலக்கூறுகளும் சுகர் (Sugar), பாஸ்பேட் (Phosphate) மூலக்கூறுகளும் இணைக்கப்பட்டிருக்கும், (இதுவரையில் மனிதனால் விளங்க முடியாதது உயிர் மட்டுமே. இது எங்கிருந்து வருகிறது எங்கு இருக்கிறது எங்கு செல்கிறது என அனைத்தும் ??? தான்). வளைந்த அமைப்பில் இருக்கும் DNA வை பிரித்து அதில் உள்ள மூலக்கூறின் அமைப்பை வரிசை படுத்தினால் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது போன்று கோடிங்காக இருக்கும். 

மரபுகளின் இந்த தொடர் மிக முக்கியமானது, தற்போதை கண்டுபிடிப்பு படி ஒருவன் அமைதியானவனா அல்லது கோபக்காரனா என்பது உட்பட மரபில் பொதிந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர், இதை வைத்து மனிதனின் சுபாவம் உட்பட தலைமுறையாக தொடரக்கூடிய செய்திகளும் இதில் பதியப்பட்டிருக்கும்.

(தலைமுறையாக இது தொடரும் எனினும் அவற்றை தண்ணீர் தொட்டியில் போட்டு போதி தர்மரின் பழைய நினைவுகளை தூண்டுதல் என்பதெல்லாம் கொஞ்சமல்ல ரொம்ப ஓவர்)

>gi|363399400|gb|CY103856.1| Influenza A virus (A/Tomsk/29/2011(H1N1)) neuraminidase (NA) gene, partial cds

ATGAATCCAAACCAAAAGATAATAACCATTGGTTCGGTCTGTATGACAATTGGAATGGCTAACTTAATAT
TACAAATTGGAAACATAATCTCAATATGGATTAGCCACTCAATTCAACTTGGGAATCAAAGTCAGATTGA
AACATGCAATCAAAGCGTCATTACTTATGAAAACAACACTTGGGTAAATCAGACATATGTTAACATCAGC
AACACCAACTTTGCTGCTGGACAGTCAGTGGTTTCCGTGAAATTAGCGGGCAATTCCTCTCTCTGCCCTG
TTAGTGGATGGGCTATATACAGTAAAGACAACAGTATAAGAATCGGTTCCAAGGGGGATGTGTTTGTCAT
AAGGGAACCATTCATATCATGCTCCCCCTTGGAATGCAGAACCTTCTTCTTGACTCAAGGGGCCTTGCTA
AATGACAAACATTCCAATGGAACCATTAAAGACAGGAGCCCATATCGAACCCTAATGAGCTGTCCTATTG
GTGAAGTTCCCTCTCCATACAACTCAAGATTTGAGTCAGTCGCTTGGTCAGCAAGTGCTTGTCATGATGG
CATCAATTGGCTAACAATTGGAATTTCTGGCCCAGACAATGGGGCAGTGGCTGTGTTAAAGTACAACGGC
ATAATAACAGACACTATCAAGAGTTGGAGAAACAATATATTGAGAACACAAGAGTCTGAATGTGCATGTG
TAAATGGTTCTTGCTTTACCATAATGACCGATGGACCAAGTGATGGACAGGCCTCATACAAGATCTTCAG
AATAGAAAAGGGAAAGATAGTCAAATCAGTCGAAATGAATGCCCCTAATTATCACTATGAGGAATGCTCC
TGTTATCCTGATTCTAGTGAAATCACATGTGTGTGCAGGGATAACTGGCATGGCTCGAATCGACCGTGGG
TGTCTTTCAACCAGAATCTGGAATATCAGATAGGATACATATGCAGTGGGATTTTCGGAGACAATCCACG
CCCTAATGATAAGACAGGCAGTTGTGGTCCAGTATCGTCTAATGGAGTAAATGGAGTAAAAGGATTTTCA
TTCAAATACGGCAATGGTGTTTGGATAGGGAGAACTAAAAGCATTAGTTCAAGAAAAGGTTTTGAGATGA
TTTGGGATCCAAACGGATGGACTGGGACAGACAATAACTTCTCAATAAAGCAAGATATCGTAGGAATAAA
TGAGTGGTCAGGATATAGCGGGAGTTTTGTTCAGCATCCAGAACTAACAGGGCTGGATTGTATAAGACCT
TGCTTCTGGGTTGAACTAATCAGAGGGCGACCCAAAGAGAACACAATCTGGACT

இது மனிதனை தாக்க கூடிய (Influenza A virus (A/Tomsk/29/2011(H1N1)) neuraminidase (NA) gene) வைரஸின் மரபணு தொகுப்பு. இந்த கோடிங்கில் அந்த வைரஸின் தலை வால் அதன் உணவு முறை என அனைத்தும் பதியப்பட்டிருக்கும். இதே போன்றே அனைத்து உயிரினங்களுக்குள்ளும் பதியப்பட்டிருக்கும். இந்த வைரஸ் நுண்ணுயிரி என்பதால் கோடிங் சிறியதாக உள்ளது.

1990 ம் ஆண்டு NIH - National institute of health ஒரு ஆராய்ச்சியை துவங்கியது அது மனிதனின் அனைத்து மரபுகளையும் தொகுக்கும் ஆராய்ச்சி, அதற்கு மனித மரபியல் தொகுப்பு (Human Genome Project) என்று பெயரிட்டது. 15 வருட காலத்தில் முடிப்பதாக திட்டமிடப்பட்ட இந்த ஆராய்ச்சி விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சியால் 13 வருட காலத்தில் அதாவது கடந்த 2003ல் முடிக்கப்பட்டது, மனித உடம்பில் இருக்க கூடிய 20000 – 25000 மரபுகளை பகுப்பது, மனித மரபில் இருக்கும் 3 பில்லியன் வேதியியல் மூலக்கூறுகளை கணினியில் sequence ஆக மாற்றி அதை database வடுவில் சேமித்து வைப்பது ஆகும், தற்போது அனைத்து மனித மரபுகளும் பகுக்கப்பட்டு கணினியில் ஏற்றப்பட்டது, அதை வைத்து கணினி மென்பொருள் மூலம் மற்ற மரபுகளுடன் தொடர்பு படுத்தி பார்க்கலாம், இரண்டு விலங்கின் அல்லது மனிதனின் மரபுகளை சோதிக்கவேண்டும் எனில் அதை நாமே மென்பொருள் உதவிகொண்டு பகுத்தாய்ந்தாய்வதற்கு ஏதுவாக பல சுலபமான மென்பொருள்கள் (Tools) வந்துவிட்டன. இதை தொடர்பு படுத்தியே மனிதனின் மரபிற்கும் (Human Genome) சிம்பன்சி மரபிற்கும் (Chimpanzee Genome) உள்ள 96% ஒற்றுமையை கூறுகின்றனர். 

மரபுகளை பகுத்தாய்வதில் மருத்துவ ரீதியாக அதிக பயனுண்டு, Gene therapy மூலம் பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தல் மேலும் கொலை கொள்ளைகளில் ஈடுபடும் குற்றவாளிகளை DNA testing கொண்டு சுலபமாக கண்டுபிடித்து விடலாம். நம்மை தாக்க வரும் நோய்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கான தீர்வைகாணவும் இந்த ஆராய்ச்சி உதவுகின்றது. இனி ஒரு காலம் வரலாம், மனிதனின் மரபை வைத்து அவனின் உருவம் கணினியில் வரையப்படலாம், அதாவது மனிதனின் ஒரு முடி கிடைத்தால் (வேருடன் கூடிய முடி ஏனெனில் வேரில் தான் DNA பதியப்பட்டிருக்கும் பார்பர் கடையில் இருக்கும் முடியை வைத்து ஒரு உபயோகமும் இல்லை) போதும் அவனின் உருவத்தை வரைந்து விடலாம் என்ற நிலை ஒரு நாள் வரும். 

மரபில் உள்ள atgc யில் திடிரென ஒரு 'a' வை யாராவது இடையில் இணைதாலோ அல்லது எடுத்தாலோ, பரிணாம வாதிகளின் சிந்தனைப்படி திடிரென வேறொரு உயிரினம் உருவாகிவிடாது, இது போன்று சில நேரங்களில் சிறு மாற்றங்கள் (புற ஊதா கதிர் மற்றும் அகசிவப்பு கதிர் மற்றும் கெமிக்கல் பாதிப்பால் சீர்குலைய வாய்ப்புள்ளது) ஏற்படும் போது அந்த மரபு மாற்றமான உயிரினத்திற்கு நோய் அல்லது ஊனம் போன்ற ஏதேனும் ஒன்று ஏற்பட்டு விடும், அதையே mutation என்று கூறுவர், அந்த மாற்றமும் அவ்வளவு சீக்கிரம் ஏற்பட்டு விடாது, அந்த மாற்றங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காகவே DNA repair செய்ய கூடிய புரதங்கள் உடலிலேயே உருவாகின்றன, வேறொருவர் மாற்றினாலே அது தவறாகும் என்கிற பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இவைகள் தானாக மாறி மாறி வேறொரு மரபுகளை வடிவமைத்து கொள்கிறது என்பதெல்லாம் எந்த அளவு அறியாமை என்பதை சிந்தித்து பாருங்கள். இது முழுமையாக எழுதி வைக்க பட வேண்டும். வேறொரு உயிரினம் வேண்டும் என்றால் வேறொரு மாதிரி இந்த மரபு கோடிங்கை மாற்றி எழுத வேண்டும். அப்பொழுது தான் புது விலங்கு தோன்றும், சில காலங்களுக்கு முன்னால் கூட ஜப்பானிய விஞ்ஞானிகள் மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்தி புது வகையான ஊதா வண்ண ரோஜா உருவாக்கினர், தற்போது இந்தியாவில் இருக்கும் முக்கிய பிரச்சனையான மரபணு மாற்று கத்தரிக்காயும் இதே அடிப்படையிலேயே செய்யப்படுகின்றது. அதேபோன்று மனித மரபணு மாற்று உருவாக்கமும் எதிர்காலத்தில் சாத்தியமே. 

உயிரினங்கள் ஒரு வரைமுறையில் இருப்பதால் தான் அவற்றை மாற்ற வாய்ப்பு இருக்கிறது, தானாக வந்திருந்தால் அவற்றை மாற்ற வாய்ப்பே இருந்திருக்காது அல்லவா?


பில் கேட்ஸ் ஒருமுறை மரபுகளை பற்றி கூறும்பொழுது மனிதன் உருவாக்கிய கணினி மென்பொருளை உருவாக்க கூடிய மொழியை விட (0,1) மிகைத்த ஒரு மொழியை கொண்டு உருவாக்க பட்டுள்ளது என்று கூறினார். மேலே கொடுக்கப்பட்டுள்ள நான்கு (A,T,C,G) வேதியியல் மூலக்கூறுகளில் மட்டும் தான் அனைத்து செய்திகளையும் DNA பதிகின்றது இந்த நான்கு வேதியியல் மூலக்கூறுகளை மட்டுமே வைத்துக்கொண்டு அவைகளை மாற்றி, இணைத்து ஒரு புரத மூலக்கூறை தருகிறது என்பது ஒரு விசித்திரமான செய்தி மேலும் அந்த செல்கள் அனைத்தும் உயிர்வாழ வழிவகையும் செய்து அதன் மூலமே இரத்தமும் சதையும் உருவாக்கி உயிரினங்கள் வாழ்கின்றன என்றால் அது ஒரு விசித்திரமான செய்திதான். நாம் பயன்படுத்துகின்ற கணினியும் அதை சார்ந்தவையும் தானாக உருவாயின, அதன் கோடிங் எல்லாம் தானாகவே உருவாகியது என்று கூறினால் முட்டாள் என்று கூரமட்டார் பிறகு மரபணுக்களை தன்னகத்தே கொண்ட உயிரினங்களும் தானாக வந்தது என்று கூறுபவரை என்ன வென்று கூறுவது. 

சரி அடுத்து, மூலக்கூற்று உயிரியலின் மைய கோட்பாட்டில் இரண்டாம் நிலையாக செல்லில் உள்ள ரிபோசொம் (Ribosome) மும்மூன்று RNAக்களை இணைத்து புரதமாக மாற்றப்பட்ட பிறகு, அந்த புரதத்தில் இருப்பவை தான் அமினோ அமிலங்கள் (Amino acids), இங்கு மரபணு செய்யும் இயந்திரமாக செயல்படுவது ரிபோசொம், மூன்று மூன்று DNA வாக இது படித்து அதை சரிபார்த்து அதை புரத மூலக்கூறாக வெளியிடுகிறது, இதன் அமைப்பு தொழிற்சாலையில் இயங்கும் இயந்திரத்திற்கு ஒத்தது. வெளியிடப்படும் புரத மூலக்கூற்றில் இருபது வகையான அமினோ அமிலங்கள் உள்ளன. அவற்றை பகுத்தாயும் பொழுது (Sequencing) இருபது ஆங்கில வார்த்தையை பயன்படுத்து அந்த அமினோ அமிலங்களை பிரிக்கின்றனர். மேலும் எந்தெந்த மூன்று மூலக்கூறுகள் இணைந்து அமினோ அமிலங்களை தரும் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் காணலாம். இது உடல் உறுப்புக்கள், சதை, இரத்த வளர்ச்சியின் முந்தைய கட்டம்.


DNA க்களை sequence செய்தது போன்று இந்த அமினோ அமிலங்களும் sequence செய்யப்பட்டு கணினியில் database ஆக சேமிக்கபடுகின்றன, எதிர்காலத்தில் இது சம்பந்த பட்ட ஆராய்ச்சிகள் மேலும் முக்கியமான மனித நோய்களுக்கு தீர்வாகவும் பயன்படும்.
        1 lgsieisnkk asdaekvyge csqkgpvpfs hclpteklqr cekigegvfg evfqtiadht
       61 pvaikiiaie gpdlvngshq ktfeeilpei iiskelslls gevcnrtegf iglnsvhcvq
      121 gsypplllka wdhynstkgs andrpdffkd dqlfivlefe fggidleqmr tklsslatak
      181 silhqltasl avaeaslrfe hrdlhwgnvl lkktslkklh ytlngkssti pscglqvsii
      241 dytlsrlerd givvfcdvsm dedlftgdgd yqfdiyrlmk kennnrwgey hpysnvlwlh
      301 yltdkmlkqm tfktkcntpa mkqikrkiqe fhrtmlnfss atdllcqhsl fk

புரத பகுப்பாய்வு (Protein Sequence)
Chain A, Crystal Structure Of Haspin Kinase என்ற புரதத்தின் பகுப்பாய்வு. Sequenceல் இருக்கும் ஆங்கில வார்த்தைகள் அனைத்தும் 20 வகையான அமினோ அமிலங்கள்.

இதன் பிறகே மனித உடல் பல்வேறு நிலைகளை கடந்து உறுப்பு (organ) நிலையை அடைகிறது, ஒரு வகையான செல்களிலிருந்து பல வகையான செல்கள் வளர்ந்து கொள்கின்றன அதே போன்று அந்த செய்திகளை அடிப்படையாக வைத்து மனிதனுக்கு ஒரு உருவத்தையும் தருகின்றன, அப்படி உருவான அனைத்து செல்லிலும் இந்த அனைத்து நிகழ்வுகளும் பொறிக்கப்பட்டிருக்கும் அச்சு பிசகாமல்.இந்த மொழிகள் அனைத்தும் எழுதி வைக்கப்பட்டவை என்பதற்கு போதுமான சான்றுகள் மரபிலேயே பதியப்பட்டுள்ளது. இவைகள் எல்லாம் தானாக உருவாவதற்கு (.5 ~ சதவிகித) வாய்ப்பு கூட இல்லை. 

இந்த மனித உடம்பில் உள்ள மரபுகள் பல பாகங்களாக இருக்கும், அனைத்து செய்திகளும்அனைத்து செல்களிலும் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட செல்கள் குறிப்பிட்ட தனக்கு கொடுக்கப்பட்ட பணியை மட்டுமே பார்க்கும், அதாவது கைகளில் உள்ள செல்களில் கைகள் உருவாக தேவையான செய்திகள் மட்டும் ஆக்டிவ் நிலையிலும் மற்ற மரபுகள் மறைக்க பட்ட (Hidden) நிலையிலும் இருக்கும், அனைத்து மரபுகளும் சில குறிப்பிட்ட செல்களில் மட்டுமே ஆக்டிவ் நிலையில் இருக்கும், அனைத்தும் முழுமையாக அடங்கிய செல்களையே ஸ்டெம் செல் (Stem cells) என்று கூறுகிறோம், தொப்புள் கொடியில் (umbilical cord ) தான் முதலில் முழுமையான ஸ்டெம் செல் அனைத்தும் அடங்கியிருக்கும் என்றபோதும் வளர்ந்த பிறகும் ஒவ்வொரு எழும்பு மஜ்ஜைகளில் (Bone morrow) தங்கியிருக்கும், உயிரினத்தின் அந்த குறிப்பிட்ட உறுப்புகளில் ஏதேனும் நோயோ அல்லது விபத்தோ ஏற்பட்டால் அந்த நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி கொடுத்து அந்த உறுப்பை அந்த நோயிலிருந்து மீட்டெடுக்க உதவும்.


இது எதிர்கால பிரச்சனையை கணக்கில் கொண்டு உயிரினத்திற்கு தரப்பட்ட ஒரு நன்மை, பரிணாமத்தின் படி உயிரினம் உருவாகி இருந்தால் அது எப்படி எதிர்கால பிரச்சனையை கணக்கில் கொண்டு செயல்படும், அப்படி நடைபெற்றால் அதற்கு எப்படி பரிணாமவளர்ச்சி என்று அர்த்தம் ஆகும், நேரிடையாக பார்த்தாலும் வடிவமைக்கபட்டது (design) என்று தானே பொருள், இது போன்ற எதிர் கால பிரச்சனையை கணக்கில் கொண்டு உயிரினத்தின் ஒவ்வொரு பாகத்திலும் பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன, இதையெல்லாம் கணக்கில் கொண்டே இந்த பரிணாமம் என்பது ஒரு கட்டுக்கதை அது நடைபெறவே வாய்ப்பில்லை என்பதை சில விஞ்ஜானிகள் விளங்கினர். 

அடுத்த தலைமுறையில் திரும்பவும் முதலிலிருந்து ஒரு பெண்ணின் கருமுட்டை மனிதன் உருவாக தேவையான பாதி செய்தியுடன் ஆணின் விந்தணுவிற்கு காத்து கொண்டிருக்கும், வெற்றி கரமாக அடுத்த பாதியுடன் இணைந்து புது கருவை உருவாக்கும், இங்கு குறித்துக்கொள்ள வேண்டியது கரு ஆணாக இருந்தால் அந்த கரு வளர்ந்து மனிதனாகும் போது அவனின் விந்தனுவில் இருக்க கூடிய 23 குரோமோசோம்கள் உட்பட இங்கு எழுதி வைக்கப்பட்டிருக்கும், அதே பெண்ணாக இருந்தால், அது வளர்ந்து பெரியவளாகி அவளின் கருமுட்டையில் இருக்க கூடிய அடுத்த சந்ததியை உருவாக்க கூடிய பாதி குரோமோசோம்கள் உட்பட தற்போது உள்ளது மரபில் பதியப்பட்டிருக்கும், அதன்படியே நடக்கும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இவ்வாறு தரப்பட்டுள்ளது பரிணாமப்படி எதுவும் நடைபெற்றிருந்தால் 50% மரபு செய்திகளை எதற்காக விந்தனும் கருமுட்டையும் வைத்து கொள்ள வேண்டும், இங்குதான் மரபணு என்பது வேறொரு சக்தியால் வடிவமைக்கப்பட்டது என்ற செய்தியை முழுமையாக அறியலாம்.


மனித உருவாக்கத்தை செல்கள் எவ்வாறு செயல்படுத்துகின்றன என்று அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒரு அருமையான காணொளியை பாருங்கள். நம்முடைய செல்கள், திசுக்கள், உடல் உறுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்று புரியும். 

இவைகள் அனைத்தும் தற்போது கண்டறிந்த தொழிர்நுட்பங்கள், இது போன்ற உயிரினங்களின் உடலில் இருக்கும் மர்மங்கள் மரபுகள் டார்வின் போன்ற தத்துவ ஞானிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, மரபணுவை அடிப்படையாக வைத்தும் எந்த உயிரினத்தையும் அவர் ஆராயவுமில்லை, மரபணுவை கிரிகோர் மெண்டல் (Gregor Mental) கண்டறிந்ததற்கு பின்னரே உயிரி தொழிர்நுட்பத்தில் பல புரட்சிகள் வந்தன. 

ஆயிரகணக்கான தொழில்நுட்பங்களில் வடிவமைக்கபட்டிருக்கின்ற இவைகளெல்லாம் ஒரு மின்னலுக்குள் உருவானது என்றோ தானாகவே வளர்ச்சி அடைந்தன என்றோ சொல்ல கூடிய அளவிற்கு அதன் செயல்பாடுகள் இல்லை என்பதை விளக்கவே நமது இந்த கட்டுரை, மேலும் இந்த நுணுக்கமான பொருள்கள் ஒன்றல்ல இரண்டல்ல 2 மில்லியனுக்கு அதிகமான வெவ்வேறு உருவங்களில் வெவ்வேறு தொழில்நுட்பங்களில் இருந்தும் இது வரை ஒரு சின்ன மரபணு கூட மின்னலில் வரவில்லை என்பதை அழுத்தமாக கூற கடமை பட்டுள்ளோம். 

பிறகு எதற்காக இவைகளெல்லாம் உருவாக்கப்பட்டன, நம்முடைய வாழ்வின் நோக்கம் தான் என்ன? 
                                       

Post Comment

69 Comments:

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சகோ கார்பன் கூட்டாளி!

எளிய தமிழில் தெளிவாய் உடற்கூறு மரபணு குறித்து விளக்கியமைக்கு

ஜஸாகல்லாஹ் கைரன்

//பிறகு எதற்காக இவைகளெல்லாம் உருவாக்கப்பட்டன, நம்முடைய வாழ்வின் நோக்கம் தான் என்ன? //

பரிணாமவாதிகள்... பதில் சொல்வார்களா? காத்திருப்போம்.

Unknown said...

Assalamu alikum bro!
Good post! Thanks for sharing jazakallahu kair!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.கார்பன் கூட்டாளி,
மிக நீளமான கட்டுரை. பொறுமையாக ஆழ்ந்து இணைந்து படிக்க வேண்டியதிருந்தது. நிறைய தகவல்களை தந்திருக்கிறீர்கள். நன்றி சகோ.

///அந்த மாற்றங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காகவே DNA repair செய்ய கூடிய புரதங்கள் உடலிலேயே உருவாகின்றன. வேறொருவர் மாற்றினாலே அது தவறாகும் என்கிற பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இவைகள் தானாக மாறி மாறி வேறொரு மரபுகளை வடிவமைத்து கொள்கிறது என்பதெல்லாம் எந்த அளவு அறியாமை என்பதை சிந்தித்து பாருங்கள்.///--சுபஹானல்லாஹ்.....ம்ம்ம்.... சிந்தித்து பார்க்கவேண்டுமே 'அவர்கள்'..!

வலையுகம் said...

அடுக்கடுக்கான ஆதாரங்களோடு செமத்தியான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

//அந்த மாற்றமும் அவ்வளவு சீக்கிரம் ஏற்பட்டு விடாது, அந்த மாற்றங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காகவே DNA repair செய்ய கூடிய புரதங்கள் உடலிலேயே உருவாகின்றன, வேறொருவர் மாற்றினாலே அது தவறாகும் என்கிற பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இவைகள் தானாக மாறி மாறி வேறொரு மரபுகளை வடிவமைத்து கொள்கிறது என்பதெல்லாம் எந்த அளவு அறியாமை என்பதை சிந்தித்து பாருங்கள்.//

முன்முடிவோடு பிடிவாதமாக இருக்கும் பரிணாமவாதிகளும் அவர்களின் அடிபொடிகளும் சிந்திக்க வேண்டுமாய் அன்போடு நானும் கேட்டுக் கொள்கிறேனுங்கே

Unknown said...

ஸலாம்

நல்ல முயற்சி .. இன்னும் நன்றாக படிக்கிறேன் ..
இணையத்தில் நானும் ஒரு நாடோடி ..

ஜசகல்லாஹ்

Unknown said...

வா அலைக்கும் அஸ்ஸலாம்,

சகோ. குலாம்,

//பரிணாமவாதிகள்... பதில் சொல்வார்களா? காத்திருப்போம்.//

பல மிச்சமிருக்கு அதில் இதுவும் ஒன்னு.

Unknown said...

wa alaikkum assalam bro. jaffer khan,

welcome brother and pls share to your friends also.

Unknown said...

வா அலைக்கும் அஸ்ஸலாம் சகோ. முஹம்மத் ஆசிக்,

//மிக நீளமான கட்டுரை. பொறுமையாக ஆழ்ந்து இணைந்து படிக்க வேண்டியதிருந்தது. நிறைய தகவல்களை தந்திருக்கிறீர்கள். நன்றி சகோ.//

முடிந்த அளவு சுருக்கி விட்டேன் சகோ. பகுதியாக போடவும் எனக்கு உடன்பாடு இல்லை. மேலும் இது ஒரு நுணுக்கமான சுப்ஜெட் என்பதால் சிறிது ஆழ்ந்து படிக்க நேரிடும்.

தொடர்ந்து படியுங்கள், நன்றி சகோ.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

//அடுக்கடுக்கான ஆதாரங்களோடு செமத்தியான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே//

அல்ஹம்துலில்லாஹ், நன்றி சகோ.

//முன்முடிவோடு பிடிவாதமாக இருக்கும் பரிணாமவாதிகளும் அவர்களின் அடிபொடிகளும் சிந்திக்க வேண்டுமாய் அன்போடு நானும் கேட்டுக் கொள்கிறேனுங்கே//

நானும் எதிர்பார்க்கிறேன்.

Unknown said...

சகோ. சிந்தனை,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ. தொடர்ந்து படியுங்கள்,

சார்வாகன் said...

1.மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு என்றால் என்ன?ஏன் இவ்வாறு அழைக்கப் படுகிறது?

2. இது யாரால் முதலில் வடிவமைக்க்ப் பட்டது?அப்போது இருந்து இப்போது வரை ஏதேனும் மாற்றம் அடைந்து உள்ளதா இல்லையா?


இக்கேள்விகளுக்கு (இன்றைய) இப்பதிவில் இருந்து பதில் உள்ளதா?
இருந்தால் அளிக்கவும்.
இல்லையெனில் அடுத்த பதிவில் இடவும்.
(கேள்விகள் தொடரும்)

suvanappiriyan said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சிறந்த பதிவு. சில இடங்களில் புரிவது கொஞ்சம் சிரமமாக உள்ளது. இன்னொரு முறை பொறுமையாக படிக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி!

Unknown said...

//1.மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு என்றால் என்ன?ஏன் இவ்வாறு அழைக்கப் படுகிறது?//

பதிவில் கூறிய இரண்டு நிகழ்வுகளை மையமாக கொண்டே மொத்த உயிரியலும் உள்ளதால் அவ்வாறு கூறப்படுகிறது,

//2. இது யாரால் முதலில் வடிவமைக்க்ப் பட்டது?அப்போது இருந்து இப்போது வரை ஏதேனும் மாற்றம் அடைந்து உள்ளதா இல்லையா?//

இது பலரின் கண்டுபிடிப்பு, தற்போதும் மரபணுவை பற்றி ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது, நிரூபிக்கப்பட்டது.

/(கேள்விகள் தொடரும்)//

நன்றி, எதிர்பார்க்கிறேன்.

Unknown said...

சகோ. நண்டு @நொரண்டு -ஈரோடு,

நன்றி, தொடர்ந்து படியுங்கள்.

Unknown said...

வா அலைக்கும் அஸ்ஸலாம்,

சகோ. சுவனப்பிரியன்,

//சில இடங்களில் புரிவது கொஞ்சம் சிரமமாக உள்ளது. இன்னொரு முறை பொறுமையாக படிக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி!//

மரபியல் பற்றி முன்னமே தெரிந்திருந்தால் சிரமம் இருக்காது, மற்றபடி தவிர்க்க முடியாதது,முடிந்தவரை இலகுவாக தர முயல்கிறேன்,

கருத்திற்கு நன்றி, தொடர்ந்து படியுங்கள்.

Radhakrishnan said...

மிகவும் அருமையாக அறிவியலை எழுதி இருக்கிறீர்கள். மிக்க நன்றி. இத்தனை சிரமப்பட்டு எழுதிய நீங்கள் இதற்கும் இறைவனுக்கும் முடிச்சு போட வேண்டிய அவசியம் இல்லையெனினும் உங்கள் நோக்கம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சில வரிகள் பட்டவர்த்தனமாக திணிக்கப்பட்டதுதான் என்பதை நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்து சிந்தித்து பார்த்தால் புரியும்.

//இவைகள் எல்லாம் தானாக உருவாவதற்கு .5 சதவிகித வாய்ப்பு கூட இல்லை. //

அப்படி என்றால் 0.4 சதவிகித வாய்ப்பு அல்லது 0.49 சதவிகித வாய்ப்பு இருக்கிறதா?

//ஆயிரகணக்கான தொழில்நுட்பங்களில் வடிவமைக்கபட்டிருக்கின்ற இவைகளெல்லாம் ஒரு மின்னலுக்குள் உருவானது என்றோ தானாகவே வளர்ச்சி அடைந்தன என்றோ சொல்ல கூடிய அளவிற்கு அதன் செயல்பாடுகள் இல்லை என்பதை விளக்கவே நமது இந்த கட்டுரை//

இத்தனை அறிவியல் முன்னேற்றம் நடைபெற்ற போதிலும் நம்மால் இறைவன் என்கிற தத்துவத்தை விட முடியாமைக்கு காரணம் நமது வாழ்க்கையில், நமது முன்னோர்கள் நம்மில் செலுத்திய எண்ணங்கள். நீங்கள் தற்போது மத நம்பிக்கை அற்ற ஒரு குடும்பத்தில் பிறந்தாலும் உங்களின் கவன ஈர்ப்பு பொறுத்தே எல்லாம் நடைபெறும். மரபியல் தத்துவங்களை விளக்கிய நீங்கள் எதற்கும் நரம்பு மண்டலம் பற்றி ஒரு பார்வை செலுத்துங்கள். சில புரிதல்கள் அல்ல, பல விசயங்கள் தெளிவுபடும்.

நீங்கள் எழுதியதை குறை கூறும் மனப்பான்மையில் எழுதவில்லை, நீங்கள் எழுதிய மரபணு விசயம் பாராட்டுக்குரியது, ஏனெனில் ஒன்றை நிலை நிறுத்த வேண்டி நாம் செய்யும் முயற்சிகள் அதற்குரிய காரணிகள் மட்டுமே பார்க்கும் என்பது இயற்கை நியதி. நீங்கள் எழுதிய இதே விசயங்கள் வைத்து பரிணாம கோட்பாடு பின்பற்றுவோர் வாதிடலாம். இங்கு வாதங்கள் முக்கியமில்லை, இறைவன் என்பவரை விடுவித்து நமது உடல், உயிர், செல், திசு என எல்லா விசயங்களை பற்றி தீர அறிந்து கொள்தலே அறிவியலின் நோக்கம். அறிவியலின் நோக்கம் இறைவன் இல்லை என்பதை நிரூபிக்க கிளம்பியது போன்ற ஒரு உணர்வை விதைத்தது மத சிந்தனையாளர்களின் குற்றமே அன்றி அறிவியலாளர்களின் குற்றம் அல்ல.

இன்னும் தொடர்வேன், தொடருங்கள்.

Unknown said...

//மிகவும் அருமையாக அறிவியலை எழுதி இருக்கிறீர்கள். மிக்க நன்றி. //

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ. தங்களின் சில விஷயங்களில் நான் ஒத்து போகின்றேன் என்கிறபோதும் பல விஷயங்களில் எனக்கு மாற்று கருத்து இருக்கிறது.

//இத்தனை சிரமப்பட்டு எழுதிய நீங்கள் இதற்கும் இறைவனுக்கும் முடிச்சு போட வேண்டிய அவசியம் இல்லையெனினும் உங்கள் நோக்கம் புரிந்து கொள்ள முடிகிறது. //

நோக்கத்தை கட்டுரையிலேயே கொடுத்து தானே எழுதி இருக்கிறேன்,

“ஆயிரகணக்கான தொழில்நுட்பங்களில் வடிவமைக்கபட்டிருக்கின்ற இவைகளெல்லாம் ஒரு மின்னலுக்குள் உருவானது என்றோ தானாகவே வளர்ச்சி அடைந்தன என்றோ சொல்ல கூடிய அளவிற்கு அதன் செயல்பாடுகள் இல்லை என்பதை விளக்கவே நமது இந்த கட்டுரை,”

இறைவனுக்கும் முடிச்சி போட வேண்டிய அவசியம் இருக்கிறது,நம்முடைய இந்த கட்டுரை மட்டுமல்ல அதிகப்படியான கட்டுரையில் நாம் குறிப்பிட விரும்புவது பரிணாமம் தவறு என்று, எதற்காக அதை நிரூபிக்க முயல வேண்டும், அதை மனிதர்கள் புரிந்து கொண்டார்கள் என்றால் மட்டுமே மனிதன் எதற்காக படைக்க பட்டான் என்ற சிந்தனையின் பக்கம் திரும்புவார்கள், இல்லையெனில் பரிணாமம் என்ற கடிவாளதுடன் எதேற்சியாக வந்ததே நம்முடைய வாழ்வு என்ற எண்ணம் கொண்டே வாழ்கையை கழிப்பான்,

உண்மையில் நம்முடைய வாழ்வின் நோக்கம் என்ன? நாம் எதற்காக வாழ்கிறோம், இவ்வளவு சிரமபட்டு எதற்காக நமது உடல் மணம், இந்த பிரபஞ்சம் அனைத்தும் செயல்பட வேண்டும்,
வெறும் சாப்பிடவும் தூங்கவும், வேலை செய்யவுமா நாம் வாழ்கிறோம். இன்னும் எத்தனையோ கேள்விகளுக்கு பரிணாமத்திலும் அதை அடிபப்டை கொள்கையாக கொண்ட நாத்திக கமுனிச கொள்கையிலும் பதில் இல்லை,

//ஆனால் சில வரிகள் பட்டவர்த்தனமாக திணிக்கப்பட்டதுதான் என்பதை நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்து சிந்தித்து பார்த்தால் புரியும்.//

நிச்சயமாக அதற்கு வாய்ப்பு இல்லை, கீழே கொடுக்கப்பட்டுள்ள வரியை தவிர்த்து எந்தெந்த வரிகள் என சுட்டிக்காட்டினால் அதற்கு விளக்கம் தர அல்லது அதை நீக்க ஏதுவாக இருக்கும்.

//அப்படி என்றால் 0.4 சதவிகித வாய்ப்பு அல்லது 0.49 சதவிகித வாய்ப்பு இருக்கிறதா?//

ஒரு உவமை என்ற அர்த்தத்திலேயே அந்த .5 என்பதை போட்டுள்ளேன், அதாவது நம்மூரில் நடைமுறையில் கூறுவார்கள் தெரியுமா “சொன்ன அறவே புரியாது”, இந்த வார்த்தைக்கு யாரும் அப்படியெனில் .4 அளவு புரியுமா என்று கேட்க மாட்டார்கள், மேலும் அப்படி அந்த வார்த்தைக்கு முக்கியத்துவும் தரும் அளவிற்கு அது கட்டுரையில் மைய கருத்து அல்ல, அதை நீக்கிவிட்டு “வாய்ப்பே இல்லை” என்ற வார்த்தையை போட்டால் கூட அதன் பொருள் மாறாது.

//இத்தனை அறிவியல் முன்னேற்றம் நடைபெற்ற போதிலும் நம்மால் இறைவன் என்கிற தத்துவத்தை விட முடியாமைக்கு காரணம் நமது வாழ்க்கையில், நமது முன்னோர்கள் நம்மில் செலுத்திய எண்ணங்கள்//

அறிவியல் முன்னேற்றம் என்பது மத நம்பிக்கையை போக்கத் தானா? எதற்காக நம்பிக்கையை விட வேண்டும், ஆதாரம் கேளுங்கள், ஆதாரத்தின் அடிப்படையில் நம்புங்கள். நாம் முன்னேறிவிட்டோம் மத நம்பிக்கை இருக்க கூடாது என்றொரு மாயை சிந்தனையை சிலர் விதைத்து விட்டார்கள், முன்னோர்கள் செலுத்திய எண்ணங்கள் என்ற கண்ணாடியை அணியாமல் ஆதாரத்தின் அடிப்படையில் நம்பிக்கையை வைக்கலாமே.

//நீங்கள் எழுதிய மரபணு விசயம் பாராட்டுக்குரியது, ஏனெனில் ஒன்றை நிலை நிறுத்த வேண்டி நாம் செய்யும் முயற்சிகள் அதற்குரிய காரணிகள் மட்டுமே பார்க்கும் என்பது இயற்கை நியதி.//

நம்முடைய காரணியையும் விளக்கி விட்டேன், பரிணாமம் என்றொரு பொய் கதையை மக்களிடத்தில் விதைக்காதீர்கள் என்பதே அது.

//நீங்கள் எழுதிய இதே விசயங்கள் வைத்து பரிணாம கோட்பாடு பின்பற்றுவோர் வாதிடலாம்.//

நிச்சயம் வாதிட முடியாது, இதை வைத்து அவர்கள் வாதிட்டதும் கிடையாது, வாதிடவும் வழி இல்லை, அனைத்தும் எழுதி வைக்கப்பட்டது என்பதை ஏற்று கொள்ளகூடிய சூழ்நிலைக்கு தள்ளபடுவர்.

//இங்கு வாதங்கள் முக்கியமில்லை, //

வாதங்கள் மிக முக்கியம் என்பதே என்னுடைய கருத்து, அதுவே அறிவின் திறவு கோல்.

//இறைவன் என்பவரை விடுவித்து நமது உடல், உயிர், செல், திசு என எல்லா விசயங்களை பற்றி தீர அறிந்து கொள்தலே அறிவியலின் நோக்கம். //

மதத்தை விடுவித்து என்று கூறினால் கூட அதில் அர்த்தம் உண்டு இறைவனை விடுவித்து என்று கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. மதத்தை வைத்து திசுவை ஆராயுங்கள் என்று நாம் கூறவும் இல்லை. ஆராய்ந்த அந்த முடிவுகளை மதத்துடன் ஒப்பிடவாவது செய்யுங்கள் என்று தான் கூறுகிறோம்.

//அறிவியலின் நோக்கம் இறைவன் இல்லை என்பதை நிரூபிக்க கிளம்பியது போன்ற ஒரு உணர்வை விதைத்தது மத சிந்தனையாளர்களின் குற்றமே அன்றி அறிவியலாளர்களின் குற்றம் அல்ல. //

இறைவன் இல்லை என்றே சில அறிவியலாளர்கள் கூறுகின்றனரே அது யார் குற்றம்.

//இன்னும் தொடர்வேன், தொடருங்கள்.//

நன்றி சகோ. தொடருங்கள்.

Radhakrishnan said...

//பரிணாமம் என்ற கடிவாளதுடன் எதேற்சியாக வந்ததே நம்முடைய வாழ்வு என்ற எண்ணம் கொண்டே வாழ்கையை கழிப்பான்,

உண்மையில் நம்முடைய வாழ்வின் நோக்கம் என்ன? நாம் எதற்காக வாழ்கிறோம், இவ்வளவு சிரமபட்டு எதற்காக நமது உடல் மணம், இந்த பிரபஞ்சம் அனைத்தும் செயல்பட வேண்டும்,
வெறும் சாப்பிடவும் தூங்கவும், வேலை செய்யவுமா நாம் வாழ்கிறோம். இன்னும் எத்தனையோ கேள்விகளுக்கு பரிணாமத்திலும் அதை அடிபப்டை கொள்கையாக கொண்ட நாத்திக கமுனிச கொள்கையிலும் பதில் இல்லை,//

இறைவட் கொள்கையில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விருப்பம் கொள்கின்றேன், நேரம் இருக்கும்போது எழுதுங்கள்.
உங்களுக்கு எதிர் கருத்து என நினைக்க வேண்டாம், நீங்கள் குறிப்பிட்ட ஒரே காரணத்திற்காக நீங்கள் எழுதிய அதே விசயங்களின் அடிப்படையில் எனக்கு இறைவன் பிடிக்கும் என்றாலும் பரிணாமம் தான் என்று நான் எனது கட்டுரை ஒன்றில் விரைவில் எழுதிதான் பார்க்கிறேன். பின்னர் தகவல் தெரிவிக்கிறேன். அதுவரை நீங்கள் எழுதிய விசயங்கள் படித்து தெரிந்து கொள்கின்றேன்.
வாதங்கள் என்பதற்கும் கருத்துரையாடல் என்பதற்கும் வேறுபாடு அறிவீர்கள்தானே சகோ! வாதம் என்பது நான் சொல்வதுதான் சரி என வாதிடுவது. கருத்துரையாடல் என்பது இரண்டு பக்க நிலைகளை தெளிவாக அலசி ஆராய்ந்து சொல்வது. பரிணாமமே தவறு என நீங்கள் சொல்வதும், இறைவனே இல்லை என வேறு எவரும் சொல்வதும் முற்றிலும் கோணலாகத்தான் முடியும், ஏனெனில் நன்றாக யோசித்து பாருங்கள் இந்த பூமி தோன்றிய போது எப்படி இருந்தது, இருந்திருக்கும் என அறிவியலும் சொல்லவில்லை, மனிதரும் அறிந்திருக்க வில்லை. எதற்கும் நரம்பு மண்டலங்கள் பற்றி எழுந்துங்களேன் நேரம் இருப்பின். நன்றி சகோ.

சார்வாகன் said...

ஸலாம் சகோ
/A.மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு என்றால் என்ன?ஏன் இவ்வாறு அழைக்கப் படுகிறது?//

பதிவில் கூறிய இரண்டு நிகழ்வுகளை மையமாக கொண்டே மொத்த உயிரியலும் உள்ளதால் அவ்வாறு கூறப்படுகிறது/
********************************8
ஒரு கேள்விக்குபதில் எளிமையாகவும் ,தெளிவாகவும் இருக்க வேண்டும்.

எந்த இரு நிகழ்வுகள் இதை சொல்கிறீர்க‌ள் என்று நினைக்கிறேன்
/) குரோமோசோம்களில் உள்ள DNA வை DNA polymerase எனும் அமைப்பு RNA வாக மாற்றுவது Transcription எனப்படும், இது முதல் முக்கிய நிகழ்வு.


2) இதன் பிறகு இந்த RNA வை செல்லில் உள்ள ரிபோசொம் (Ribosome) எனப்படும் ஒரு அமைப்பு புரதமாக (Protein) மாற்றும் இந்த நிகழ்வை Translation என கூறுவர், இது இரண்டாவது நிகழ்வு/

DNA(DNA) RNA(RNA)Protein

இது ம‌ட்டும்தானா!!!!!!!!!!!!!!!!!!!! இது இபோதைய கொள்கையா!!!!!!!!!!!

இன்னும் சரியாக மூலக்கூறு உயிரியலின் மையக் கோட்பாடு என்றால் என்ன என்பதை விளக்கவும். வேண்டுமானால் இங்கிருந்து பதில் தேடி அளிக்கவும்.
http://en.wikipedia.org/wiki/Central_dogma_of_molecular_biology
நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிந்து இருக்கும் என எண்ணுகிறேன்.

B)இது யாரால் முதலில் வடிவமைக்க்ப் பட்டது?அப்போது இருந்து இப்போது வரை ஏதேனும் மாற்றம் அடைந்து உள்ளதா இல்லையா?
விக்கிபிடியாவை படித்தால் இதற்கும் விடை கிடைக்கும அல்லது உங்களது ரெஃபெரென்ஸ்
http://sandwalk.blogspot.com/2007/01/central-dogma-of-molecular-biology.html

The demise of the Central Dogma of Molecular Biology is becoming an annual event. Most recently, it was killed by non-coding RNA (ncRNA) (Mattick, 2003; 2004). In previous years the suspects included alternative splicing, reverse transcriptase, introns, junk DNA, epigenetics, RNA viruses, trans-splicing, transposons, prions, epigenetics, and gene rearrangements

என்ன சொல்ராங்க கொஞ்சம் விளக்கவும்.!!!!!!!!!!!!!!!.
(இன்னும் நிறைய இருக்கு முதலில் மையக் கோட்பாட்டை சரி செய்வோம்)

abdul hakkim said...

assalamualikkum
சிந்தித்து இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை ஏற்றுக்கொள்ள வைக்கும் பதிவு
சகோ உங்கைளப் போன்ற கல்வியாளர்கள் இஸ்லாத்திற்க்காக இன்னும் நிறைய எழுதவேண்டும் தொடர்ந்து எழுதுங்கள்
ஜஸாக்கல்லாஹ் கைரன்

abdul hakkim said...

assalamualikkum
மொபைல் சைட்டை ஆன் செய்யவும்

வருண் said...

So, what are you trying to say, God made the L-amino acid with his own hand as he is a left hander. Not able to make D-amino acid? LOL

வருண் said...

***பிறகு எதற்காக இவைகளெல்லாம் உருவாக்கப்பட்டன, நம்முடைய வாழ்வின் நோக்கம் தான் என்ன? ***

வாழ்வின் நோக்கத்துக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்??

கடவுளுக்கும் மூலக்கூறு உயிரியல் காரண காரியங்கள் நம்ம மரம்ண்டைகளுக்கு புரியாததுக்கும் என்ன சம்மந்தம்?

புரியாத, தெரியாத, விசயங்களைக் காட்டிக் காட்டி கடவுளை கட்டி அழுவதால் என்ன லாபம்? இதையெல்லாம் உமக்கு கடவுள் புரியவச்சுடுவாரா என்ன?

எதுக்கெடுத்தாலும் கடவுளைக் கொண்டுவந்து கொல்லாதீங்கப்பா!

வருண் said...

Human could make D-amino acids but God could not! Who do you think is superior?

And how do you know God has a better understanding about Molecular biology than we do?

You are just assuming right?

Just giving too much to God is NONSENSE and NOT SCIENCE!

THINK!!!

Anonymous said...

No body can understand ur this post.Nobody can explain why u written this post with so many in explicable facts.
So you must be GOD!!!!!!!!!!!!!!!!

Anonymous said...

GOD did it is not a scientific explanation

Dr.Dolittle said...

அறிவியலை எளிமையாக புரிய வைத்துள்ளீர்கள் என்ற அளவில் உங்கள் கட்டுரை எனக்கு பிடித்திருக்கிறது . எனினும் தாங்கள் சில கருத்துக்களை திருத்து கூறியிருப்பது போல தோன்றுகிறது (இதை தங்களின் hypothesis என்றும் கொள்ளலாமா ? , அறிவியல் கருத்துக்கள் அனைத்தும் அறுதியானவை அல்ல ,எல்லாமே ஒரு வகையில் hypothesis தான் ),
/பரிணாமப்படி எதுவும் நடைபெற்றிருந்தால் 50% மரபு செய்திகளை எதற்காக விந்தனும் கருமுட்டையும் வைத்து கொள்ள வேண்டும், இங்குதான் மரபணு என்பது வேறொரு சக்தியால் வடிவமைக்கப்பட்டது என்ற செய்தியை முழுமையாக அறியலாம்./

aphids , whip tail lizard , komodo dragon போன்றவை virgin birth தரும் ஆற்றல் கொண்டவை , இவற்ற்றை பற்றி தங்கள் கருத்து(பின் குறிப்பு : நான் நாத்திகன் அல்ல , இருப்பினும் evalution மீது நம்பிக்கை உடையவன் )

அரவிந்தன் நீலகண்டன் said...

//குரோமோசோம்களில் உள்ள DNA வை DNA polymerase எனும் அமைப்பு RNA வாக மாற்றுவது Transcription எனப்படும், இது முதல் முக்கிய நிகழ்வு.// பரிணாம அறிவியலின் உண்மை நம்பிக்கையால் மூடப்பட்டிருக்கும் மூளைகளுக்குள்ளும் இறங்குவதாக. DNA Polymerase அல்ல அது. அது RNA polymerase. DNA Polymerase DNA வைத்தான் மீண்டும் உருவாக்கும். ஆக முதல் கோணல் - அதுவும் சிவப்படித்து கோணல். :)

முகுந்த்; Amma said...

Sir

You were trying to prove that evolution is not real, and you are trying to preach/teach people by showing Influenza H1N1 NA gene. Hahaha..... That's so funny. Please read the history of Flu. It's the best example of survival of the fittest. And it had many methods like antigenic shift and drift to make itself fittest. Just read latest news about H5N1 - bird flu causing virus being able to adapt/ made fittest to affec humans from Dutch scientists.

Please don't preach bad science

Unknown said...

//V.Radhakrishnan இறைவட் கொள்கையில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விருப்பம் கொள்கின்றேன், நேரம் இருக்கும்போது எழுதுங்கள்.//

நன்றி சகோதரரே, நானும் எழுதுகிறேன், இருப்பினும் மற்ற நண்பர்களும் இறை கொள்கைகளை பற்றி தொடர்ந்து எழுதி கொண்டுதான் இருக்கின்றனர் என்பதை கூற கடமை பட்டுள்ளேன்.

//பரிணாமம் தான் என்று நான் எனது கட்டுரை ஒன்றில் விரைவில் எழுதிதான் பார்க்கிறேன். பின்னர் தகவல் தெரிவிக்கிறேன்.//

கருத்துரையாடல்கள் அடிப்படையில் நிச்சயம் அதற்கு விளக்கம் கிடைக்கும் என எதிர்பார்கிறேன்.

//வாதங்கள் என்பதற்கும் கருத்துரையாடல் என்பதற்கும் வேறுபாடு அறிவீர்கள்தானே சகோ!//

ஒரே பொருள் கொண்டே பயன்படுத்தி வந்தேன், இனி மாற்றி கொள்கிறேன்.

//பரிணாமமே தவறு என நீங்கள் சொல்வதும், இறைவனே இல்லை என வேறு எவரும் சொல்வதும் முற்றிலும் கோணலாகத்தான் முடியும், //

பரிணாமம் சரி எனவும் என்னுடைய முதல் கட்டுரையிலே எழுதி உள்ளேன், (நுண்பரிணாமம்,) பார்த்தால் உங்களுக்கு கூடுதல் விளக்கம் கிடைக்கலாம்.

http://carbonfriend.blogspot.com/2010/07/blog-post.html

//எதற்கும் நரம்பு மண்டலங்கள் பற்றி எழுந்துங்களேன் நேரம் இருப்பின். நன்றி சகோ.//

இறைவன் நாடினால் வரும் கட்டுரைகளில் எழுதுகிறேன்.

Unknown said...

வா அலைக்கும் அஸ்ஸலாம், சகோ. சார்வாகன்.

//இது ம‌ட்டும்தானா!!!!!!!!!!!!!!!!!!!! இது இபோதைய கொள்கையா!!!!!!!!!!!//

தாங்கள் குறிப்பிட்ட இரண்டு செயல்களை மட்டும் தான் மைய கொள்கை என்பார்கள், அதை முடிந்த அளவு சுருக்கி கூறியுள்ளேன், இப்போதைய கொள்கை தான்............................................
மேலும் எதை எதிர்பார்க்கிரீர்கள் என புரியவில்லை,

//நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிந்து இருக்கும் என எண்ணுகிறேன்.//

நேராகவே கேட்கலாம்.

//B)இது யாரால் முதலில் வடிவமைக்க்ப் பட்டது?அப்போது இருந்து இப்போது வரை ஏதேனும் மாற்றம் அடைந்து உள்ளதா இல்லையா?//

The central dogma of molecular biology was first articulated by Francis Crick in 1958[1] and re-stated in a Nature paper published in 1970

இது தான் அதன் வேலை என்பது கண்டறியப்பட்டது, அதில் இருக்கும் நுண் மரபுகளை பகுப்பயிவதில் புது புது யுக்தி பயன் படுத்தப்பட்டு வருகிறது.

//The demise of the Central Dogma of Molecular Biology is becoming an annual event. Most recently, it was killed by non-coding RNA (ncRNA) (Mattick, 2003; 2004). In previous years the suspects included alternative splicing, reverse transcriptase, introns, junk DNA, epigenetics, RNA viruses, trans-splicing, transposons, prions, epigenetics, and gene rearrangements//

அதில் நடக்க கூடிய ப்ராசஸ் சகோ. DNA என்பது RNA வாக மாறிய பிறகு திரும்பவும் DNA வாக மாறாது என்பது அறிவியலாளர்களின் சிந்தனை, இதை உடைக்கும் விதமாக RNA DNA வாக மாறுகிறது, சில வைரஸ் கள் அதை மாற்றுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் விளக்க வேண்டும் எனில் தனி பதிவு தொடர் தான் போட வேண்டும்.

//(இன்னும் நிறைய இருக்கு முதலில் மையக் கோட்பாட்டை சரி செய்வோம்)//

நன்றி சகோ.

Unknown said...

சகோ. abdul hakkim,

வ அலைக்கும் அஸ்ஸலாம்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, தொடர்ந்து படிக்கவும்,

//மொபைல் சைட்டை ஆன் செய்யவும்//

ஆன் செய்தாகி விட்டது.

Unknown said...

Bro. வருண்,

//So, what are you trying to say, God made the L-amino acid with his own hand as he is a left hander. Not able to make D-amino acid?//

May be through some process.

//வாழ்வின் நோக்கத்துக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்??//

பிறகு எதற்காக இவைகளெல்லாம் உருவாக்கப்பட்டன.

//கடவுளுக்கும் மூலக்கூறு உயிரியல் காரண காரியங்கள் நம்ம மரம்ண்டைகளுக்கு புரியாததுக்கும் என்ன சம்மந்தம்?//

இவைகள் தானாக வந்திருக்காது என்பதை கூறவே இவ்வளவும்.

//புரியாத, தெரியாத, விசயங்களைக் காட்டிக் காட்டி கடவுளை கட்டி அழுவதால் என்ன லாபம்? //

புரிந்து கொள்ள முயற்சிப்பீர் அல்லவா.

//இதையெல்லாம் உமக்கு கடவுள் புரியவச்சுடுவாரா என்ன?//

கடவும் மட்டும் அதுவும் நேரிடையாக தான் புரிய வைக்க வேண்டுமெனில் உமக்கு எதற்கு மூளை.?

//எதுக்கெடுத்தாலும் கடவுளைக் கொண்டுவந்து கொல்லாதீங்கப்பா!//

உருவாக்கியவரையே உதாசீன படுத்துவது தான் அறிவியலா?

//Human could make D-amino acids but God could not! Who do you think is superior?//

Thank you for accepting that this amino acid should be made, and who make the first amino acid.

//And how do you know God has a better understanding about Molecular biology than we do?//

I am not saying god having better understanding about molecular biology, I am saying who made and know very well of molecular biology, he is god.

//Just giving too much to God is NONSENSE and NOT SCIENCE!//

Then give me from your thought, why we are here.?

//THINK!!!//

THINK!!!

Unknown said...

வருக சகோ. இப்னு ஷாகிர் (எ) almahwa consulting services (எ) அவ்ரங்கஜீப் (எ) பகடு (எ) பெயரில்லா.

//No body can understand ur this post.Nobody can explain why u written this post with so many in explicable facts.//

Then how this facts were coming ?

//GOD did it is not a scientific explanation//

What your thought is wherever god name mentioned, its not scientific, good job!!

Pls. give me the answer for the asked question.

Unknown said...

சகோ. Dr.Dolittle,

//எனினும் தாங்கள் சில கருத்துக்களை திருத்து கூறியிருப்பது போல தோன்றுகிறது (இதை தங்களின் hypothesis என்றும் கொள்ளலாமா ? , அறிவியல் கருத்துக்கள் அனைத்தும் அறுதியானவை அல்ல ,எல்லாமே ஒரு வகையில் hypothesis தான் ),//

திருத்து கூறுவது என்பதெல்லாம் பெரிய வார்த்தை சகோ. முடிந்தால் அவை என்னென்ன என்று கூறலாம்.நம்முடைய கட்டுரையின் துணை தலைப்பே இந்த பரிணாமம் என்பது தவறு, மனிதன் வடிவமைக்கப்பட்டான் என்பது தான். அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளேன், இவை எல்லாம் உருவாக்கியவரை தான் கடவுள் என்று கூற வருகிறேன். கடவுளை பற்றி பேசுவதே hypothesis என்பது தான் என்ற மாய தோற்றம் உருவாக்கப்பட்டது.

இவைகளை வைத்து கடவுளை புரிந்து கொள்ளலாம் என்பதே என்னுடைய கருத்து.

//aphids , whip tail lizard , komodo dragon போன்றவை virgin birth தரும் ஆற்றல் கொண்டவை , இவற்ற்றை பற்றி தங்கள் கருத்து//

முழுமையாக தெரிந்து கொண்டு கருத்து கூறுகிறேன்,

//(பின் குறிப்பு : நான் நாத்திகன் அல்ல, இருப்பினும் evalution மீது நம்பிக்கை உடையவன்)//

நன்றி சகோ. இன்றைய வரையும் நானும் “micro evaluation” ள் முழுமையாக நம்பிக்கை கொண்டவனே.mutation அடிப்படையில் இயற்கையின் தேர்வு அடிப்படையில் இல்லை.

Unknown said...

சகோ. அரவிந்தன் நீலகண்டன்

//DNA Polymerase அல்ல அது. அது RNA polymerase. // //ஆக முதல் கோணல் - அதுவும் சிவப்படித்து கோணல். :)//

வருகைக்கும் தவறை சுட்டி காட்டியமைக்கும் நன்றி சகோ. தவறு திருத்தப்பட்டது. பதிவை எழுதும் போதே கண்டறிந்துவிட்டேன் இருப்பினும் மாற்ற மறந்துவிட்டேன்.

தொடர்ந்து படிக்கவும்.

Anonymous said...

ஆஹா என் கண்ணை திறந்து விட்டீர்கள் இறை தூதர் கார்பன் கூட்டாளி

என் குல சாமி வண்டிக் கருப்பண்ண சாமி தான் இந்த அமினோ அமிலத்தை உருவாக்கி இருக்க வேண்டும் .ஏனெனில் ஒரே கல்ப்பில் பத்து பாட்டின் சாராயம்(ஆல்கஹால்) குடிக்கும் சாமி அமினோ ஆசிட் எம்மாத்திரம்.

முதலில் தனியாக் இருக்கும் போது சாராயம் தயாரிக்கும் போது ஏற்பட்ட குறைபாட்டின் அமினோ அமிலம் வந்து மனிதன்(உடப்ட்ட பிற உயிரினங்கள்) உருவாகி இருக்க வேண்டும்.இன்னைக்கு கோயில் சாமியாடி கிட்டே அருள்வாக்கு(அரபியில் வஹி)கேட்டுட்டா தெரிந்து விடும் சரியா?

Unknown said...

சகோதரி. முகுந்த் அம்மா,

// You were trying to prove that evolution is not real//

Ofcourse its mentioned in article also. Give me the exact ways of evolution if you feel evolution is right.

// and you are trying to preach/teach people by showing Influenza H1N1 NA gene. Hahaha..... That's so funny.//

Its great funny. Its only FOR EXAMPLE OF GENE STRUCTURE,AND I SAID ITS ONLY FOR EXAMPLE OF GENE STRUCTURE, AND YOU ARE TELLING THE DIFFERENT FACTS OF THAT VIRUS. NOT EVEN IMPORTANT TO OUR ARTICLE.

// Please read the history of Flu. It's the best example of survival of the fittest. And it had many methods like antigenic shift and drift to make itself fittest. Just read latest news about H5N1 - //

I have taken in NCBI site. see the link. and GIVE ME THE REFERENCES of yours FOR THE SAME,

http://www.ncbi.nlm.nih.gov/pubmed/22164233

// Please don't preach bad science//

RIDICULOUS, DON’T TRY TO GIVE BAD IMPRESSION ON MY SITE. HOW WILL YOU SAY ITS BAD SCIENCE, PLS. GIVE ME THE LIST OF BAD SCIENCES MENTIONED IN THIS ARTICLE…………………. IF YOU ARE TRUE.

முகுந்த்; Amma said...

Please go to google and type Influenza in it. You will get tons of articles read at least the wiki page and you will get all the references and connection between influenza and evolution. All the referrences given in the wiki page are from publications from nature and science journals.

Even you can type evolution of avian influenza in google and read the highly contagious evolved strain of influenza I have mentioned before.

I am not talking about some irrelevant topic of the virus here. I am indeed specifying the evolution of small organism, which I believe you are talking about in your post.

வால்பையன் said...

நல்லாயிருக்கும் போதே தீடீர்னு மாடு ஆறு காலோட குட்டி போடுதே ஏன்?

UFO said...

//////////வால்பையன் சொன்னது…
நல்லாயிருக்கும் போதே தீடீர்னு மாடு ஆறு காலோட குட்டி போடுதே ஏன்?\\\\\\\\\

அது சாப்பிடுகின்ற புல்லு வளருகிற இடத்தில் எல்லாம் நீரு சும்மா இருக்காம போயி உம்ம அமோக மகசூலுக்காக வேண்டி பூச்சிக்கொல்லி மருந்தையும் ரசாயன உரத்தையும் போட்டு வச்சீரே... அதை மறந்துட்டீரா? ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இப்படி எந்த ஆடு குட்டி போட்டது ஓய்..? சும்மா புட்டி அடிச்சிட்டு போதையிலே மல்லாராமே... மூளையை கசக்கி இனியாவது ஆழமாக சிந்திக்கவும். முதலில் உம்ம பின்னாடி உள்ள வாலை வெட்டவும் ஓய்..

வால்பையன் said...

அது சாப்பிடுகின்ற புல்லு வளருகிற இடத்தில் எல்லாம் நீரு சும்மா இருக்காம போயி உம்ம அமோக மகசூலுக்காக வேண்டி பூச்சிக்கொல்லி மருந்தையும் ரசாயன உரத்தையும் போட்டு வச்சீரே... அதை மறந்துட்டீரா? ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இப்படி எந்த ஆடு குட்டி போட்டது ஓய்..? சும்மா புட்டி அடிச்சிட்டு போதையிலே மல்லாராமே... மூளையை கசக்கி இனியாவது ஆழமாக சிந்திக்கவும். முதலில் உம்ம பின்னாடி உள்ள வாலை வெட்டவும் ஓய்..//


ரசயானத்தால் மரபணுவில் மாற்றம் ஏற்படுவதை ஒப்பு கொண்டதற்கு நன்றி.

இன்னொரு முறை போதையில் உளருகிறேன் என்று எழுதினால் செருப்பால் அடிப்பேன்!

9994500540 அழைத்து நேரில் வந்து கூட அடி வாங்கி செல்லலாம்.

வருண் said...

***I am not saying god having better understanding about molecular biology, I am saying who made and know very well of molecular biology, he is god.***

I am asking HOW DO YOU KNOW that it is GOD??? You have a tiny little brain and you are not smart enough to figure out anything on your own. How did you figure that it is GOD who created? I am sure GOd helped you to know this truth too, right?? LOL

You see, you are talking NONSENSE!

For every damn thing you dont understand yet, you give credit to the GOD until someone figures out!

1) Kekule figured the structure of benzene! Before he figured, GOD is the only person who knew the structure!

2) Watson and Crick figured out the structure of DNA. Before that God only knew the structure of DNA.

Now that first asymmetric synthesis of L-amino acid was carried out by GOD UNTIL someone figures out how, and tell your dumb brain that this how, of course! LOL

What does this tell you?

You assume all the unknowns are known only to GODS until someone figures! I am saying that is UTTER NONSENSE!

Unknown said...

சகோ.முகுந்த் அம்மா

//Even you can type evolution of avian influenza in google and read the highly contagious evolved strain of influenza I have mentioned before.//

The virus gene which i mentioned in my article is affecting human or not?. if you are telling its not affecting human, please give me the proper reference......

//I am not talking about some irrelevant topic of the virus here. I am indeed specifying the evolution of small organism, which I believe you are talking about in your post//

The post is related core of biology and the name of the core is not evolution of small organism, its central dogma.

"HOW WILL YOU SAY ITS BAD SCIENCE, PLS. GIVE ME THE LIST OF BAD SCIENCES MENTIONED IN THIS ARTICLE…………………. IF YOU ARE TRUE."

Unknown said...

//நல்லாயிருக்கும் போதே தீடீர்னு மாடு ஆறு காலோட குட்டி போடுதே ஏன்?/

சகோ. எல்லாம் மரபுல ஏற்படுற குளறுபடி, அது தான சரியாயி அடுத்த குட்டிய சரியா போடும், மனிதன் ஊனாமா பிறக்கிறான் அல்லவா, அது போல.

Unknown said...

//ரசயானத்தால் மரபணுவில் மாற்றம் ஏற்படுவதை ஒப்பு கொண்டதற்கு நன்றி.//

நிச்சயமா சகோ. ரசாயனத்தால் மரபுல மாற்றம் ஏற்படும், அதுமட்டுமில்லாம, புற ஊதா, அகசிவப்பு கதிர் மேல பட்டாலும் மாற்றம் ஏற்படும், அத நம்ம மேல பட விடாம தான் ஓசோன் நமக்கு பாதுக்காப்பு கொடுக்குது (நம்மல பாதுகாக்க இயற்கைக்கு என்ன தேவை அது வேற கதை) ஹிரோஷிமா அணுகுண்டு விளைவால இப்ப பிறக்கிற குழந்தை கூட ஊனமா பிறக்கிறதா சொல்லுராங்கள்ள இதே கான்செப்ட்தான்.

இங்க நோட் பண்ண வேண்டியது, இந்த விளைவுனால எப்பயுமே மரபு மேம்பட்ட நிலைய அடையாது. அப்டின்னா ஊனமா மட்டும் தான் போகும், நல்ல மரபு கிடைக்காது.

முகுந்த்; Amma said...

//"HOW WILL YOU SAY ITS BAD SCIENCE, PLS. GIVE ME THE LIST OF BAD SCIENCES MENTIONED IN THIS ARTICLE…………………. IF YOU ARE TRUE."
//

Since you repeatedly asked for it..
HEre are some incorrect science you used in your article.
//இந்த வினைக்கு Reverse Transcriptase என்று கூறுவர்//

Its called Reverse Transcription, The enzyme which regulates this reaction is only called as Reverse Transcriptase.

//இதன் காரணமாகவே எய்ட்ஸ் நோய்க்கு இது வரையில் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை,//

What Nonsense is this...Please refer to wiki to learn more about why we cannot find drugs for this virus...

The reason is....HIV is constantly evolving.

//காச நோய் (Tuberculosis) ஆகிய நோய்களுக்கும் இது வரை மருந்து கண்டுபிடிக்க முடியாமைக்கு காரணம் இந்த நோய்கள் மரபுகள் சார்ந்து இருப்பதும் மனிதனின் அடிப்படை மூலப்பொருளான இந்த மரபுகளையே தாக்குவதும் தான்)//


All nonsenses..

about a decade back drugs for tuberculosis has been found..TB is a curable disease.

And another nonsense Cancer is caused by unregulated expression, and its caused by the defect in controling mechanism that causes uncontrolled growth.

//புரதம் பின்பு கார்போ ஹைட்ரேட்ஸ் (Carbohydrates), லிபிட்ஸ் (Lipids) அதாவது கை கால் என மற்ற அனைத்து உறுப்புகளும் உருவாக மூலகாரணமாக உள்ளது, )//

Another nonsense...

you cannot create corbohydrates and lipids from protein...it has to be consumed from food...
its basic 10th -12th standard biology.


To be continued....

Mohamed Faaique said...

அருமையான பதிவு நன்பரே!!!

வருண் said...

Carbon whatever!

Nobody wants to insult you or anything but you need to understand there are bloggers who know what you are talking about and much more than that.

* There are reverse transcriptase inhibitors for HIV protease, developed long time ago.

* There are HIV protease several inhibitors today, for controlling HIV replication as well.

They work somewhat OK to control the replication to a great extent.

Again, the mutation is the major problem in HIV. Some of these drugs dont work in "mutated" analogs.

--------------------
Tuberculosis is bacterial disease, right?. There are antibacterial agents like isoniazid to treat it and control it well. TB spreads in third-world countries because people those who have are having the "active bacteria" cough and sneeze in public places and "closed environments". They need to be quarantined properly for a while. Ignorance is the major problem there.

-----------------------

Proteins have carbohydrates in their backbone?? Could you name some?

I know DNA and RNA has ribose and deoxyribose in their backbone which you could certainly call as carbohydrate units! However I dont think such carbohydrate units are "regenerated" by breaking and DNA/RNA and "reused". You were just "sloppy" there and you must have meant something else!

Anyway, there are all kind of "audience" you have here who are reading your article. You need to be careful when you write anything. Because this is SCIENCE! not just your beliefs you are taling!

Take care! :-)

Unknown said...

// Its called Reverse Transcription, The enzyme which regulates this reaction is only called as Reverse Transcriptase//

Yes, its right. Is this example for bad science? I finished my PG project in revere transcription, and you are teaching me the reverse transcription. Haha,

I made mistake on the English word umbliqual card. Why didn’t you mention, pls mention and add this for the example for bad science.

// What Nonsense is this...Please refer to wiki to learn more about why we cannot find drugs for this virus... The reason is....HIV is constantly evolving. //

Sister, one person asking me that how to goto moon?, I said him to use rocket to goto moon, and you are saying “Nonsense first you goto space station and then use the rocket to goto moon”. The same story in your nonsense sentence.
Process of reverse transcription is by HIV and it is the abnormal activity in cell function, so it is the reason for not able to find the drugs for AIDS, without this activity where the HIV constantly evolve?????????? Is their any drug to revert the reverse transcription process?????? Even though do you want to say the exact reason?, IT AFFECTS THE BODY’S IMMUNE SYSTEM, It is not evolving and actually mutating, you are not even know the difference between mutating and evolving.

“Shortly after the viral capsid enters the cell, an enzyme called reverse transcriptase liberates the single-stranded (+)RNA genome from the attached viral proteins and copies it into a complementary DNA (cDNA) molecule.[109] The process of reverse transcription is extremely error-prone, and the resulting mutations may cause drug resistance or allow the virus to evade the body's immune system.”

// about a decade back drugs for tuberculosis has been found..TB is a curable disease.//

It is not drugs, its vaccine, since last century the scientist tried to find the vaccine for tb and it doesn't have a cure completely. Recent years they found vaccine which will take more than 6 months to be cured, eventhough, the TB can come back in the future.

A number of new TB vaccines are under development and testing

The first tuberculosis vaccine, referred to as the BCG vaccine and named bacille Calmette-Guerin after the bacteria from which it is derived, was developed in the early 1920s. In many countries, including the United States, it's not used because it just isn't very effective for most people. However, BCG vaccine is still given in many underdeveloped countries.

"The current tuberculosis vaccine is effective in preventing certain forms of the disease, such as TB meningitis, but much less effective in preventing pulmonary TB [TB in the lungs]," says George Smulian, MD, associate director of the division of infectious diseases at the University of Cincinnati.

"A number of new TB vaccines are under development and testing," Dr. Smulian says. "It is anticipated improved vaccines will be effective against many forms of the disease." In fact, at the moment, at least 10 types of tuberculosis vaccine are being tested, all in the hope of slowing the rate of tuberculosis around the world.

http://www.everydayhealth.com/tuberculosis/the-tuberculosis-vaccine-and-other-prevention-and-treatment-research.aspx

Study the history of tb http://www.umdnj.edu/ntbc/tbhistory.htm,

Unknown said...

// And another nonsense Cancer is caused by unregulated expression, and its caused by the defect in controling mechanism that causes uncontrolled growth.//

If you say nonsense, will it be nonsense // நோய்கள் மரபுகள் சார்ந்து இருப்பதும் மனிதனின் அடிப்படை மூலப்பொருளான இந்த மரபுகளையே தாக்குவதும் தான்//

Only studying on the net will not give sense to you, you should work with that. Unexpected growth of cell cause the cancer, even the biology school student know this fact, I am not knowing this as a Post graduate in Biology? What a stupid think you are talking. Is this affecting GENE or not???????????????????????????????? as I said
“இந்த மரபுகளையே தாக்குவதும் தான்”

சும்மா, விக்கிபீடியா வில் படித்து விட்டால் மட்டும் அனைத்தும் தெரிந்து விடாது, படிப்பதாலும் இப்படி அர்த்தம் இல்லாத வாதங்களை தான் வைப்பீர்கள். பொதுவில் வைக்கும் போது முழுமையாக தெரிந்து கொள்ள முற்படுங்கள், மரபிற்கும் கான்சர் ருக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லும் முட்டாள் தனத்தை என்ன வென்று கூறுவது.

விளக்கமில்லாமல் மேலோட்டமாக கொடுக்கும் விசயங்களை வைத்து கொண்டு தனக்கு எல்லாம் தெரியும் என்று காண்பித்து கொள்வதால் என்ன பிரயோஜனம்.ஒரு பதிவில் முழுமையாக எவ்வளவு செய்திகளை தரமுடியும் என்பதை கவனத்தில் கொண்டுதான் பதிவு எழுத முடியும்.

// you cannot create corbohydrates and lipids from protein...it has to be consumed from food...its basic 10th -12th standard biology.//

Haha. I was not explaining entire biology my sister, I just highlighted some points and not going indepth to that topic so I stop like that, if readers are confusing in that word, I will remove only carbohydrates, lipids or try to use some other words.

// To be continued.... //

I am not hiding anywhere, But please don’t raise some nonsense question like cancer. Its really wasting my time to attend these kind of unimportant issues.

And i think you will never think about the purpose of this article. Was human created or evolved??

முகுந்த்; Amma said...

Sir

Since you are a PG in biology and you WORKED on it, can you answer me something, what is evolutio? Is human evolution is only evolution and other organIsms don't evolve?

What is cancer how it's caused?

I never mentioned in my reply that cancer is not related to genes.


Since you know better about these and I am just reading the Wikipedia and debating here can you elaborate more about these

If you thInk that you are smarter than others and you have work and others are jobless, than I want to tell you something

I have a PhD is cancer gene expression, and I am now working with viruses especially H1N.

Anonymous said...

Human society is evolving socially,culturally,spiritually ... etc. On the earth Pre human civilisation had existed which Islam could not explain. Islam alone is true, Why so many languages, so many cultures... ? If islam is true, God should have given the Koran in the language of Adam / in all the lanaguages of the world

Unknown said...

Dear bro. வருண்,

Sorry for the late reply.

//I am asking HOW DO YOU KNOW that it is GOD??? You have a tiny little brain and you are not smart enough to figure out anything on your own. How did you figure that it is GOD who created?//

How these universes are exist.??????

// I am sure GOd helped you to know this truth too, right?? LOL// I hope.

// You assume all the unknowns are known only to GODS until someone figures! I am saying that is UTTER NONSENSE!//

Haha. There is no sense saying that all the universe, species exists by own. Is there any logic in this?

If you know something or discovered something today, it doesn’t mean yesterday it was not available. So simply don’t say nonsense, there is a sense. But atheism having no sense, truly no sense.

// Nobody wants to insult you or anything but you need to understand there are bloggers who know what you are talking about and much more than that.//

Only who are all trying to lie in a public forum, need to thing that, I don’t want.

// Anyway, there are all kind of "audience" you have here who are reading your article. You need to be careful when you write anything. Because this is SCIENCE! not just your beliefs you are taling!//

Thank u very much for your great advice, and not only for science even for the belief, we should be very careful. Otherwise it could be taken by the wrong hand like atheist.

Unknown said...

sako. Mohamed Faaique

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ. தொடர்ந்து படியுங்கள்.

Nasar said...

சகோ கார்பன் கூட்டாளி ,
பின்னாளில் வரும் நோய்கள் கூட மனிதனின் மரபணுவில் பதிய பட்டிருக்கிறது என்றால் , நிச்சயமாக வந்தே தீரும்...சரி நம் மரபணுவில்
எந்த நோயும் இல்லை என்று தெரிந்துக்கொண்ட ஒரு மனிதன், தொடர்ச்சியாக புகைத்துக்கொண்டே இருந்தால் கேன்சர் வராது அப்படித்தானே ......
கேன்சர் வரும்னா எப்படி வரும் ?! விளக்கம் தரவும் ...

Unknown said...

//பின்னாளில் வரும் நோய்கள் கூட மனிதனின் மரபணுவில் பதிய பட்டிருக்கிறது என்றால்//

இது போல எங்கே உள்ளது?

ரஹ்மான் said...

கார்பன் கூட்டாளி,

ஆறு கேள்விகள்

//சகோ. எல்லாம் மரபுல ஏற்படுற குளறுபடி, அது தான சரியாயி அடுத்த குட்டிய சரியா போடும், மனிதன் ஊனாமா பிறக்கிறான் அல்லவா, அது போல.//
1) Sickle-cell disease பெற்றோரில் யாரேனும் ஒருவரது மரபணுவில் மறைந்திருந்தால், அவருடைய பிள்ளைகளில் யாரேனும் ஒருவருக்கு dominent ஆகி அந்த வியாதி வெளிவர வாய்ப்பு இருக்கிறது.

அது எப்படி காணாமல் போய்விடும் என்று சொல்கிறீர்கள்?


2) இப்போது sickle cell disease இருந்தால் அதுவும் மரபணு ரீதியாக கடத்தப்படலாம். அதே போல எதாவது குளறுபடியாக எதாவது ஒன்று தோன்றினால், அது மரபணு ரீதியாக கடத்தப்படாதா?

3) அதே மாதிரி குளறுபடியில் எதாவது பிரயோசனமான குளறுபடியா இருந்தாலும் அது காணா போய்டுமா சகோ?

4) பிரயோசனமான குளறுபடி மரபணு ரீதியாக கடத்தபடலாம் என்றால் அதன் சந்ததி அதிகரித்தால், அந்த குழுவில் இந்த பிரயோசனமான குளறுபடியே அதிகமாகவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

5) பிரயோசனமான குளறுபடியால் அந்த சந்ததி தனியாக ஒரு இனமாக பிரிய சாத்தியம் உள்ளதா?

6) இல்லை என்றால் ஏன்?

ரஹ்மான் said...

என்ன சகோ
பதில் சொல்லமாட்டீங்களா?

Unknown said...

//1) Sickle-cell disease பெற்றோரில் யாரேனும் ஒருவரது மரபணுவில் மறைந்திருந்தால், அவருடைய பிள்ளைகளில் யாரேனும் ஒருவருக்கு dominent ஆகி அந்த வியாதி வெளிவர வாய்ப்பு இருக்கிறது.

அது எப்படி காணாமல் போய்விடும் என்று சொல்கிறீர்கள்?

2) இப்போது sickle cell disease இருந்தால் அதுவும் மரபணு ரீதியாக கடத்தப்படலாம். அதே போல எதாவது குளறுபடியாக எதாவது ஒன்று தோன்றினால், அது மரபணு ரீதியாக கடத்தப்படாதா?//

மனிதனின் உடலில் சில அபரிமிதமான சக்திகள் கடவுளால் கொடுக்கப்பட்டுள்ளது, உங்களுக்கு ஏதேனும் நோய் வந்தால் உங்களின் உணவு பழக்கங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் (Note this point) தானாக சரி ஆகிவிடும், நீங்கள் மருத்துவரிடம் செல்ல தேவை இல்லை,

அதே போன்று உங்களுடைய உணவு பழக்கம் செயல்கள் இயற்கையாக இருக்கும் பட்சத்தில் உங்கள் மரபணுவும் தானாக சரி ஆகிவிடும், இதை போன்ற குளறுபடிகளை சரி செய்யவே பல மருத்துவர்கள் உடம்பில் இருக்கின்றனர், அனைத்திற்கும் ஒரு வரைமுறை உண்டு, திடிரென்று அனுதுகள்களை கொண்டு உடம்பை தாக்கினால், அதனால் தாக்கு பிடிக்க முடியுமா? இதற்கே ஹிரோஷிமா நாகசாகி யில் குழந்தைகள் இன்றளவும் ஊனமாக பிறப்பதாக கூறுகின்றனர்,

ஆக சாதாரண செல் பாதிப்புகள் சரி செய்யப்படும், சில இயலாத மரபணு மாற்றங்கள் சந்ததிகளில் தொடரும்.

//3) அதே மாதிரி குளறுபடியில் எதாவது பிரயோசனமான குளறுபடியா இருந்தாலும் அது காணா போய்டுமா சகோ?//

இரண்டு வகை mutation உள்ளது, அதாவது Positive mutation, negative mutation. positive mutation என்பதையே இயற்கையின் தேர்வு (natural selection) என்று கூறுகின்றனர், negative mutation என்பது செல்லில் ஏற்படும் குளறுபடிகள்,

Mutation rating என்று உள்ளது,இரண்டும் சம அளவிலயே இருக்கும், அப்படி இருப்பதால் தான் மனிதன் மனிதனாக இருக்கிறான்,

அதை நடுநிலை படுத்தவே செல்லில் பல அமைப்புகள் உள்ளன.

//4) பிரயோசனமான குளறுபடி மரபணு ரீதியாக கடத்தபடலாம் என்றால் அதன் சந்ததி அதிகரித்தால், அந்த குழுவில் இந்த பிரயோசனமான குளறுபடியே அதிகமாகவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?//

வாய்ப்பு குறைவு, ஜப்பானில் மனிதன் குள்ளமாக உள்ளான், ஆப்ரிக்காவில் பெரிதாக உள்ளான், இவைகள் எப்படி நிகழ்கின்றன, இது போன்ற மரபியல் மாற்றங்களினால் தான், ஆனாலும் central structure ஒன்று தான், காது தலையில் தான் இருக்கும்,இடுப்பில் இருக்காது, அப்படியே இடுப்பில் காது வைத்து (rare case) ஏதேனும் குழந்தை பிறந்தால், அதை பார்த்து its medical miracle என்று கூறும் மருத்துவர்கள் அதை ஊனம் என்று கூறுவார்களா அல்லது பரிணாமம் என்று கூறுவார்களா? ஆம் இது தான் negative mutation, உடம்பில் உள்ள மருத்துவர்களால் சரிசெயயமுடியாத negative mutation.

negative mutation என்பதற்கு ஆயிரம் காரணம் சொல்லலாம், அணு குண்டு, புறஊதா, அகச்சிவப்பு, கெமிக்கல் கோளாறு என்று. ஆனால் possitive mutation என்பது எதன் அடிப்படையில் நிகழ்கிறது என்று கேட்டால் பதில் இருக்காது, அப்படி ஒன்று இருக்கிறதா என்பது கூட ? தான், அதை பற்றி வரும் பதிவுகளில் விரிவாக தருகிறேன்.

//5) பிரயோசனமான குளறுபடியால் அந்த சந்ததி தனியாக ஒரு இனமாக பிரிய சாத்தியம் உள்ளதா?

6) இல்லை என்றால் ஏன்?//

நிச்சயமாக இல்லை, உங்களுக்கு புரியும் படியே கூறுகிறேன், ஒரு வீடு கட்டுகிறீர்கள், அதை இடிப்பதற்கு நீங்கள் என்ன வழிமுறையை வேண்டுமானாலும் பின்பற்றலாம், கடப்பாரையை வைத்து உடைக்கலாம், விமானத்தை வைத்து இடிக்கலாம், புல்டோவ்செர் வைத்து உடைக்கலாம், ஆனால் கடபாரையையோ அல்லது புல்டோவ்சரையோ வைத்து இடிக்க இடிக்க வீடு தானாக அடுத்த தளத்தை ஏற்படுத்தி கொள்கிறது என்று கூறினால் ஏற்று கொள்வீர்களா?

பிரயோசனமான குளறுபடி என்றால் அது புதிதாக அனைத்தையும் உருவாக்கி விடுவதாக நினைத்து விட வேண்டாம், அது மரபணுவை சரி செய்வதற்காகவும், புதிதாக வரக்கூடிய நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பதர்காகவுமே பயன்படுகிறது.

அதுவும் கண்,காது, மூக்கு தேவையான இடத்தில், வைத்து சரி செய்து,இதற்கெல்லாம் துளி கூட ஆதாரம் இல்லை. வாய்ப்பும் இல்லை.

Dr.Dolittle said...

கார்பன் கூட்டாளி சகோதரா,
நீங்கள் எனக்கு பதில் அளிக்காதது போலவே
(http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post_03.html) நண்பர் ரஹ்மான் அவர்களுக்கும் பதில் அளிக்காமல் இருந்திருக்கலாம் ,தங்கள் பதிலிலேயே நிறைய அடிப்படை தவறுகள் உள்ளன

Unknown said...

தங்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்க பட்டுவிட்டது, அவரின் கேள்விகளுக்கும் பதிலளிக்கபட்டுவிட்டது.

//தங்கள் பதிலிலேயே நிறைய அடிப்படை தவறுகள் உள்ளன//

நீங்கள் மருத்துவரிடம் செல்ல தேவை இல்லை, தானாக நோய் சரி ஆகிவிடும் என்றால்.....

தாங்கள் மருத்துவர் என்பதால் அடிப்படை தவறாக தான் தெரியும்.

Dr.Dolittle said...

தங்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்க பட்டுவிட்டது

//aphids , whip tail lizard , komodo dragon போன்றவை virgin birth தரும் ஆற்றல் கொண்டவை , இவற்றை பற்றி தங்கள் கருத்து //

இந்த கேள்வியை சொல்ல வில்லை ( இதற்கும் தாங்கள் பின்னால் கூறுவதாக கூறியிருந்தீர்கள் - still waiting for the answers )

im asking u about the location of stem cells in 3 different areas of the teeth and so many other ques which i ve asked u in my post (http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post_03.html)

if u have mentioned the ans , can u give me the link, so that i can read it and get clarified (?)

//தாங்கள் மருத்துவர் என்பதால் அடிப்படை தவறாக தான் தெரியும்//

stem cell பற்றிய அடிப்படை அறிவியலையே தவறாக மக்களுக்கு சொல்கிறீர்கள் , இதை ஒரு மாணவன் படிக்க நேர்ந்தால் என்ன ஆகும் ?

சகோதரா நாம் இங்கு வார்த்தை விளையாட்டு விளையாட பதிவிடவில்லை , நீங்கள் தான் ," நம்முடைய கருத்து தவறு என்று தகுந்த ஆதாரத்துடன் நிருபிப்பார்கலானால் அதை ஏற்று கொள்ளவும் தயாராக இருக்கிறோம் ", என்று கூறினீர்கள் .

இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும் ?
தவறு என்று ஒத்துக்கொண்டு சரியான பதிவை இடுங்கள் , நான் போய் விடுகிறேன் .

இறைவனின் இருப்பை அறிவிக்க பல நல்ல வழிகள் உண்டு , அதற்காக அறிவியலை தவறாக போதிக்காதீர்கள் , plz

Unknown said...

//இந்த கேள்வியை சொல்ல வில்லை ( இதற்கும் தாங்கள் பின்னால் கூறுவதாக கூறியிருந்தீர்கள் - still waiting for the answers )//

இறைவனின் செயல் என்றே கூறுவேன், பரிணாமத்தை நிரூபிக்க ஏதேனும் சாட்சிகள் இருப்பதாக வாதிட்டால் அதற்கு பதிலளிக்கலாம், இப்படி கேட்டால் என்ன சொல்வது.

//if u have mentioned the ans , can u give me the link, so that i can read it and get clarified (?) //

already clarified in your posts as well as in mypost.

//stem cell பற்றிய அடிப்படை அறிவியலையே தவறாக மக்களுக்கு சொல்கிறீர்கள் , இதை ஒரு மாணவன் படிக்க நேர்ந்தால் என்ன ஆகும் ?//

நான் ஒன்றும் கற்பனையை எழுதவில்லை, எல்லாம் ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளேன், வரிக்கு வரி, இப்படி கூறும் நீங்கள் அந்த stem cell பதிவை படிக்க வில்லை என்றே கூறுவேன்,

நம்முடைய பதிவை ஒரு மாணவன் படிக்க நேர்ந்தால் சுயமாக சிந்திக்க பழகுவான், தற்போது பள்ளி கல்லூரிகளில் நடப்பது போன்ற மக்கர் பண்ண வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விடுபடுவான். நான் கூறுவது மருத்துவம் படிப்பவர்களையும் சேர்த்து தான்.

//சகோதரா நாம் இங்கு வார்த்தை விளையாட்டு விளையாட பதிவிடவில்லை , நீங்கள் தான் ," நம்முடைய கருத்து தவறு என்று தகுந்த ஆதாரத்துடன் நிருபிப்பார்கலானால் அதை ஏற்று கொள்ளவும் தயாராக இருக்கிறோம் ", என்று கூறினீர்கள் .//

இன்றும் கூறுவேன், என்றும் கூறுவேன், பலர் தவறை சுட்டி காட்டி இருகின்றனர், தவறானவைகளை ஏற்று கொண்டும் இருக்கின்றேன்.

//இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும் ?//

ஹாஹா.. நீங்கள் போட்டதோ இரண்டு பதிவு, அதில் ஒன்றில் பறவை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள், அதில் பதில் சொல்ல பட்ட விசயத்தையே திரும்ப கொடுத்திருந்ததால், சகோ. ஆஷிக் அஹமத் அவர்களின் பதிவை காட்டி இருந்தேன், இரண்டாவது பதிவிற்கு இன்று பதிலளிதுள்ளேன் அதற்கே இன்னும் பதில் வரவில்லை அதற்குள் வேறு என்ன ஆதாரம் வேண்டும் என்று கேட்டால் என்ன அர்த்தம்.

//தவறு என்று ஒத்துக்கொண்டு சரியான பதிவை இடுங்கள் , நான் போய் விடுகிறேன் . //

நீங்கள் போக வேண்டாம் இங்கயே இருங்கள், நன்றாக பதிவை பல முறை படுத்து பாருங்கள். பிறகு எதிர்ப்பதிவு இடுங்கள்.

//இறைவனின் இருப்பை அறிவிக்க பல நல்ல வழிகள் உண்டு , அதற்காக அறிவியலை தவறாக போதிக்காதீர்கள் , plz//

இவையெல்லாம் பதிவை திசை திருப்பும் செயல் என்றே கூறுவேன், பலர் பல வழிமுறைகளை கையால் கின்றனர், அதில் இதுவும் ஒன்று. இறைவனை நிரூபிக்க தவறான அறிவியலை போதிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, அதை எங்களுடைய வழிமுறையும் ஆதரிக்கவில்லை.

இது போன்ற கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்கவும். Pls.

Dr.Dolittle said...

{இறைவனின் செயல் என்றே கூறுவேன், பரிணாமத்தை நிரூபிக்க ஏதேனும் சாட்சிகள் இருப்பதாக வாதிட்டால் அதற்கு பதிலளிக்கலாம், இப்படி கேட்டால் என்ன சொல்வது.}
இது பரிணாமத்தின் ஒரு முக்கிய சாட்சி ,பதில் தெரியவில்லை என்றால் இறைவனை அழைக்காதீர்கள் .if u want I ll explain u , or just google about parthenogenesis of animals
{already clarified in your posts as well as in mypost.}
Sorry bro , I ve not noticed that and I ve replied for u in the same.
இன்றும் கூறுவேன், என்றும் கூறுவேன், பலர் தவறை சுட்டி காட்டி இருகின்றனர், தவறானவைகளை ஏற்று கொண்டும் இருக்கின்றேன்
நீங்கள் எற்றுகொண்டவை பற்றிய பட்டியலை இந்த சிறியேனுக்காக வெளியிடமுடியுமா ?
ஹாஹா.. நீங்கள் போட்டதோ இரண்டு பதிவு, அதில் ஒன்றில் பறவை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள், அதில் பதில் சொல்ல பட்ட விசயத்தையே திரும்ப கொடுத்திருந்ததால், சகோ. ஆஷிக் அஹமத் அவர்களின் பதிவை காட்டி இருந்தேன், இரண்டாவது பதிவிற்கு இன்று பதிலளிதுள்ளேன் அதற்கே இன்னும் பதில் வரவில்லை அதற்குள் வேறு என்ன ஆதாரம் வேண்டும் என்று கேட்டால் என்ன அர்த்தம்.?
பதிவின் எண்ணிக்கை முக்கியம் அல்ல நண்பா அதில் கூறியிருக்கும் விஷயங்கள் தான் முக்கியம் .ஆஷிக் அஹமத் நண்பரின் கேள்விக்கான பதில் அளிக்கப்பட்டு விட்டது (http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post_18.html )
உங்களுக்கான பதில் அளித்து கொண்டு இருக்கின்றேன் , நீங்கள் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் இல்லை .

Unknown said...

//இது பரிணாமத்தின் ஒரு முக்கிய சாட்சி ,பதில் தெரியவில்லை என்றால் இறைவனை அழைக்காதீர்கள் .if u want I ll explain u , or just google about parthenogenesis of animals //

உங்களையும் யாரும் ஆராய வேண்டாம் என்று கட்டளை இடவில்லை, என்னையும் யாரும் ஆராய வேண்டாம் என்று கட்டளை இட வில்லை, அதை பற்றி தற்போது அவசரமாக தேவை இல்லாததால் ஆராயவில்லை, முடிந்தால் விவரியுங்கள், இறைவனை அழைக்காதீர்கள் என்று நீங்கள் கூறும் பொழுது நானும் கூறுகிறேன், எதையும் எடுத்த உடனே தானாக வந்தது என்ற அர்த்தம் இல்லாத வாதத்தை வைக்காதீர்கள்..

//ஆஷிக் அஹமத் நண்பரின் கேள்விக்கான பதில் அளிக்கப்பட்டு விட்டது (http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post_18.html )//

படித்தேன், இருப்பினும் பல குழப்பங்கள் பதிலிடுகிறேன்,

//நீங்கள் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் இல்லை .//

அப்படியெல்லாம் இல்லை, உதாரணத்திற்கு ஸ்டெம் செல்லின் வேலை செல்களை அகற்றுவது என்று குறிபிட்டுருந்தேன், அதன் வேலை உருவாக்குவதுதான் என்பதை மாற்றி இருக்கிறேன்.

Dr.Dolittle said...

உங்களையும் யாரும் ஆராய வேண்டாம் என்று கட்டளை இடவில்லை, என்னையும் யாரும் ஆராய வேண்டாம் என்று கட்டளை இட வில்லை, அதை பற்றி தற்போது அவசரமாக தேவை இல்லாததால் ஆராயவில்லை, முடிந்தால் விவரியுங்கள், இறைவனை அழைக்காதீர்கள் என்று நீங்கள் கூறும் பொழுது நானும் கூறுகிறேன், எதையும் எடுத்த உடனே தானாக வந்தது என்ற அர்த்தம் இல்லாத வாதத்தை வைக்காதீர்கள்..
ok, then let me explain u wen time permits ( coz parthenogenesis is a big and complicated chapter)

படித்தேன், இருப்பினும் பல குழப்பங்கள் பதிலிடுகிறேன்,
my pleasure
அப்படியெல்லாம் இல்லை, உதாரணத்திற்கு ஸ்டெம் செல்லின் வேலை செல்களை அகற்றுவது என்று குறிபிட்டுருந்தேன், அதன் வேலை உருவாக்குவதுதான் என்பதை மாற்றி இருக்கிறேன்.
thanks

Dr.Dolittle said...

//ஆஷிக் அஹமத் நண்பரின் கேள்விக்கான பதில் அளிக்கப்பட்டு விட்டது (http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post_18.html )//

படித்தேன், இருப்பினும் பல குழப்பங்கள் பதிலிடுகிறேன்,

bro i ve explaine regarding this issue in
http://walkingdoctorcom.blogspot.com/2012/01/blog-post_23.html?

Anna said...

உங்கள் பதிவிற்கான பதிலை இங்கே பதிவாக்கியுள்ளேன்.

Post a Comment