Tuesday, September 13, 2011

தோண்ட தோண்ட அறிவியல் புதையல் - அல்குர்ஆன்

சார்பியல் கொள்கையும் இஸ்லாத்தின் பார்வையும்:

உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி உண்டாவதாக.

நமது முந்தைய பதிவான “கடவுளை தெளிவு படுத்தும் காலமும் வெளியும்” பதிவை காண இங்கு சொடுக்கவும்.

இறை மறையின் காலம் பற்றிய செய்திகளையும், தவறாக காண்பிக்கப்படும் நபியின் விண்வெளி பயணத்தை பற்றிய அறிய சில செய்திகளையும், சில விசயங்களை மறைத்து பொய் தகவல்களை இணைத்து வெளிப்படுத்திய நாத்திக, கம்முனிஷ பொய்களையும் உடைப்பதற்கே நம்முடைய இந்த பதிவுகள்.

இப்பிரபஞ்சத்தில் அனைத்தும் காரண காரியங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது. அதுதான் விதி. இப்பிரபஞ்சம் நேர்த்தியாக வடிவமைக்கபட்டதுமில்லாமல் பொதுவான இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டு அதன் பயணத்தை தொடர்கிறது. ஒரு சிறு பொருள் அசைந்தாலும் கூட ஏதேனும் ஒரு அர்த்தம் இருக்கும், இயற்பியல் விதிகளின் படியே செயல்படும். மனிதன் தான் செயல்படுத்தும் செயல்களில் கூட ஒரு நேர்த்தியை எதிர்பார்க்கிறான், அப்படியிருக்க இறைவனின் அரசாட்சி இப்பிரபஞ்சம் நேர்த்தியாக உள்ளதும், அடிப்படை இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் இறைவனின் நேர்த்தியை குறிப்பது. தானாக உருவானது என்ற வாதத்தை வைக்கும் நாத்திகர்கள் இயற்பியல் விதிகளை பின்பற்றி அனைத்தையும் சரியான முறையில் இயக்க வேண்டிய அவசியம் இயற்கைக்கு இல்லை என்பதை உணர வேண்டும்.

இப்பிரபஞ்ச இயக்கதிற்காகவே முதலில் விதிகள் உருவாக்கப்பட்டன. விதிகள் இல்லாத பொருள் எப்படி இருக்க, இயங்க முடியும்? விதிகள் இல்லையெனில் பிரபஞ்சமே இல்லை, உயிரினமும் இல்லை, அதற்கு வாய்ப்பும் இல்லை. அப்படியெனில் இயற்பியல் விதிகளை பின்பற்றும் இயற்கையை உருவாக்கியது வேறு ஒரு சக்தியாகத்தானே இருக்க முடியும்.

ஆக இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒன்றும் இயற்பியல் விதிகளை மீறமுடியாது, அதை உருவாக்கியவனை தவிர. விதியை இயற்றியவன் இறைவன் என்கிற போது அது இறைவனுக்கு இல்லை என்று புரிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தையும் அதன் கொள்கைகளை எவ்வளவு அறிவியல் பூர்வமாக விளக்கினாலும் அது அடிப்படை நம்பிக்கை சார்ந்த மார்க்கமாகும். ஆதாரங்களின் அடிப்படையிலான நம்பிக்கையே அது, இஸ்லாத்திற்கு மட்டும் அல்ல, அறிவியலுக்கும் அதே நம்பிக்கை தான் ஆணிவேர். ஆம் ஒரு கண்டுபிடிப்பை ஆதாரங்களுடனான நம்பிக்கை மூலம் அணுகினால் மட்டுமே அதை உருவாக்க முடியும்.

பல நாத்திகர்கள் இறைவனின் ஆற்றல், அதிசயம் சார்ந்த கேள்விகளை எழுப்புவதை காண முடிகிறது. இயற்கையாக நடைமுறையில் உள்ளதை யாராவது அதிசயம் என்று கூறுவார்களா? மனிதனின் சக்திக்கு மீறிய இயற்கைக்கு மாறாக நடைபெறுவது தான் அதிசயம். அது இயற்பியல் விதிகளுக்கு மாறாக கூட இருக்கலாம். இதில் தான் நாத்திகர்களின் கேள்விகள் எழுகின்றன. மற்ற அனைத்தும் சில வரையரைகுட்பட்டவைகள்.

இதை வைத்து பார்க்கும் போது இஸ்லாம் விளக்கிய அனைத்தும் கூட இறைவன் உருவாக்கிய பிரபஞ்ச விதிகளுக்குள் கட்டுப்பட்டுதான் நடக்கும். அந்த விசயங்களை மனிதனால் சுலபமாக விளக்க முடியும். இதுவல்லாமல் இறைவனின் அதிசயங்கள்,ஆற்றலை வெளிப்படுத்த கூடியவைகள் உதாரணமாக சந்திரன் பிளக்கப்பட்டது, இறந்த மனிதனை ஏசுநாதர் எழுப்பியது, மோசேயின் கைத்தடி பாம்பாக மாறியது etc. இது போன்றவைகள் இயற்பியல் விதிகளுக்கு மாறாகத்தான் இருக்கும், அப்படி இருக்கும் பட்சத்தில் தான் அது அதிசயம் என்றும் கூறப்படும், மேலும் இது இறைவனால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை சார்ந்தது, இதற்கு அறிவியலில் ஆதாரம் கேட்பது, இப்படி நடக்க வாய்ப்பில்லை என்று வாதிடுவது ஏற்றுகொள்ள முடியாதது. ஏனெனில் இறைவன் உருவாக்கியதை இறைவனால் மீற முடியாதா என்ன? என்ற ஏற்றுகொள்ளதக்க கேள்வி வரும். அந்த அதிசயங்களும் நேரில் கண்டால் மட்டுமே புரியக்கூடியது ஆகும்.

இந்த வரைமுறைகளை வைத்து இறைவனும் விதிகளுக்கு உட்பட்டவன் என்பதாக கருதுகின்றனர். இறைவன் தான் விதிகளுக்கு அப்பாற்பட்டவன் ஆனால் அவனால் உருவாக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் விதிகளுக்குட்பட்டவையே. இதை இறைவனின் சில வசனங்கள் மூலம் விளங்கலாம்,

(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி     (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் குன்‘ –ஆகுக என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன்2:117)

நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனநிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன்10:03)

மேலே கொடுக்கப்பட்ட இரண்டு  வசனங்களும் ஒன்றுக்கொண்டு மாறுபட்டவையாக தோன்றலாம், அவன் ‘ஆகுக’ என்றால் ஆகிவிடும் அப்படி இருக்க எதற்காக ஆறு நாட்கள் (காலங்கள்). இரண்டுமே உண்மைதான், இந்த ஆறு நாட்கள் என்பது பிரபஞ்சம் உருவாகி ஆறு நாட்களாக, ஆறு பகுதிகளாக கூட இருக்கலாம். இறைவனின் புறத்தில் ஆகுக என்றால் ஆகிவிடுகிறது, ஏனெனில் அவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன். அவனுடைய பார்வை நாளை என்ன நடக்க போகிறதோ என்று எதிர்பார்க்கும் பார்வை அல்ல. மனிதனுடைய பார்வையில் காலம் என்றொன்று சேர்ந்து விடுகிறது.

இதை இறைவனே இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும். எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக. நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
(அல் குர்ஆன் 70:4–7)

“இஸ்லாம் கூறும் சார்வியல் கோட்பாடு” என்ற தலைப்பில் onlinepj.com இணைய தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையை சரியாக புரிந்து கொள்ளாமல் பதிலளிக்கிறேன் என்ற பெயரில் செங்கொடி என்பவர் தன்னுடைய பொய்களை இணைத்து “கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா” என்ற தலைப்பில் பதிவாக இட்டது பதிவுலகில் உள்ளவர்கள் அறிந்ததே, இவரின் பதிவில் குர்ஆன் வசனங்களையும் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையையும் விளங்கி கொள்ளாமல் தனக்கு தோன்றிய கருத்துக்களை கூறியுள்ளார் என்றால் அது மிகை இல்லை.

சார்பியல் கொள்கைகளை தெள்ள தெளிவாக எடுத்து வைக்கும் மூன்று குர்ஆன் வசனங்களுக்கும் சார்பியலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதே செங்கொடி போன்ற இறை மறுப்பாளர்களின் வாதம், தங்களுடைய பொய் பிரசாரத்திற்காக அவர்களால் எடுத்து கொள்ளப்பட்ட சில குர்ஆன் வசனங்களும் அதன் விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, 

22:47. (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும். 
22:48. அநியாயங்கள் செய்து கொண்டிருந்த எத்தனையோ ஊர்களுக்கு நான் அவகாசம் கொடுத்தேன்; பின்னர் அவற்றைப் பிடித்துக் கொண்டேன்; மேலும் (யாவும்) என்னிடமே மீண்டும் வரவேண்டும்.

22:47. Yet they ask thee to hasten on the Punishment! But Allah will not fail in His Promise. Verily a Day in the sight of thy Lord is like a thousand years of your reckoning.
22: 48. And to how many populations did I give respite, which were given to wrongdoing? in the end I punished them. To me is the destination [of all].

70:4. ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.

70:4. The angels and the spirit ascend unto him in a Day the measure whereof is [as] fifty thousand years:

32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.

32:5. He rules [all] affairs from the heavens to the earth: in the end will [all affairs] go up to Him, on a Day, the space whereof will be [as] a thousand years of your reckoning.

எதற்காக இறைவன் ஒரு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்று கூற வேண்டும், இங்குதான் சார்பியல் கோட்பாடு வருகிறது.

மேலே கொடுக்கப்பட்ட முதல் இரண்டு வசனங்கள் 22:47,48 ஆகியவை இறைவனின் வேதனையை பற்றிய வசனங்கள், அதாவது வேதனை வந்தடைவதர்கான கால அளவை பற்றி குறிப்பிடுகிறது, அதை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள் என்றும், இரண்டாம் பகுதியில் குறிப்பிடும் போது கால அளவையும் குறிப்பிடுகிறான், தண்டனையின் வேகத்தை பற்றி குறிப்பிடும் போது கால அளவை குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன, அப்படியெனில் காலத்தை குறிப்பிட்டாலே அதில் வேகமும் உள்ளது என்று தான் அர்த்தம். கடந்த நூற்றாண்டில் தான் வேகத்தை பொருத்து காலம் மாறுபடும் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது, சார்பியல் கொள்கைக்கு பிறகுதான்.


அதே போன்று 70:4 வசனத்தில் வானவர்களின் பிரயாணம் பற்றி பேசும் குர்ஆன் பிரயாணத்தில் இருக்கும் போது வானவர்களின் ஒரு நாளின் அளவு என்பது பூமியில் இருக்கும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமமாக இருக்கும் என்று கூறுகிறது.

அடுத்த வசனமான 32:5 என்ற வசனமும் கால மாறுதல்களை பற்றி குறிப்பிட்ட போதும் இதற்கு மாறாக ஒவ்வொறு காரியமும் பயணிப்பதாக கூறுகிறது. (அதை பிறகு பார்போம்)

மேலே கூறப்பட்ட மூன்று வசனங்களும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வேகத்தில் பயணிக்கும் வெவ்வேறு பொருள்களை அல்லது செய்திகளை பற்றி விளக்குகிறது.

முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டியது, பிரயாணத்தின் போது கால மாறுதல்கள் ஏற்படும் என்ற சென்ற நூற்றாண்டில் கண்டறிந்த உண்மையை முஹம்மது நபி எவ்வாறு கூறி இருக்க முடியும்இதை பற்றி நாத்திக வாதிகள் கூறும்போது அல்லாஹ்வின் நாள் என்பது பெரியது என்று கூறி மக்களை ஏமாற்றவே முஹம்மது நபி அவ்வாறு கூறியதாக கூறுகின்றனர், இதை பார்க்கும் போது வசனங்களையும், சார்பியல் கொள்கை பற்றியும் எதையும் தெரியாமல் உளறுகின்றனர் என்றே கூறலாம்.

ஏனெனில் இதே கருத்து குர்ஆனில் சில வசனங்களில் தெளிவான முறையில் அமைந்துள்ளது. மேலும் எதை வைத்து ஆயிரம், ஐம்பதாயிரம் என்ற அளவுகள் கூறி இருக்க முடியும், இரண்டு அளவுகளும் சரியான எப்படி அமைய முடியும். எப்படி சரியாக அமைகிறது என்று வரும் விளக்கங்களில் பார்க்கலாம்.

சார்பியல் விதிப்படி ஒளியின் வேகமே பிரபஞ்சத்தில் அதிக பட்ச வேகம், எந்த ஒரு பொருளும் ஒளியின் வேகத்திலோ அல்லது அதைவிட வேகமாகவோ செல்ல முடியாது, ஒளியின் வேகத்தில் ஒன்று பயணிப்பதாக இருந்தால் அதற்கு காலம் என்பது நின்று விடும். இன்று வரை எவ்வளவோ முயற்சி செய்தும் ஒளியின் 99.9999.. % அளவிற்கு நுண்ணிய அணுக்களை (Sub Elementary Particles) அனுப்பினாலும் ஒளியின் வேகத்தை தொடமுடியவில்லை. அதற்கு ஒரு தடையும் (Barrier) உள்ளது. அப்படியும் ஒளியை மிஞ்சிய வேகத்தில் ஒன்று பயணித்தால் (ஒரு வாதத்திற்கு மட்டும்) அதற்கு இயற்கை விதிகள் முற்றிலும் மாறுபடும்.

ஆக பயனிக்கவோ, செய்திகளை அனுப்பவோ அதிகபட்ச வேகம் 99.999999……%C (ஒளி வேகம்). குர்ஆன் வசனங்களில் மனிதன் அந்த வேகத்தில் சென்றதாக குறிப்பிடவில்லை, அதற்கு மாறாக செய்திகளும், வானவர்களும் பயணித்ததாக குறிப்பிடுகிறது.

22:47 வசனத்தில் வேதனைகள் வருவதற்கான செய்திகளை பற்றி குறிப்பிடுகிறது, தற்போதைய அறிவியலே அதற்கு நேரிடையாக அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது என்ற அறிந்த நிலையில் அதை பற்றிய விளக்கம் தேவை இல்லை. 

அடுத்த வசனமாக 70:4 மலக்குகள் அந்த வேகத்தில் சென்றதாக கூறுகிறது, மலக்குகளுக்கு மட்டும் அந்த வேகத்தில் பயணிப்பது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்,வானவர்கள் என்பவர்கள் ஒளியால் படைக்க பட்டவர்கள் என்று     கூறியதால், ஒளியால் உருவான ஒன்று ஒளி வேகத்தில் செல்வது என்பது அதிசயமான ஒன்று அல்ல.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளனர். ஆதம்(அலை) உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட மண்ணால் படைக்கப்பட்டார்.  அறிவிப்பவர் : ஆயிஷா(ர­)

நூல் : முஸ்லிம் (5314)

சரி அது என்ன ஒரு நாள் என்பது ஆயிரம், ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்று கூறுகிறது, அதற்குதான் Lorentz transformation வருகிறது. இயற்பியல் விஞ்ஞானிகளான ஐன்ஸ்டீன், ஜோசப் லார்மேர் மற்றும் ஹென்றிக் லாரன்ஸ் ஆகியோர் கால மாறுதல்களுக்கு அளவை அறிய lorentz factor  என்ற ஒரு சூத்திரத்தை வெளியிட்டனர். இயக்கத்தில் உள்ள பொருளுக்கும் நிலையாக உள்ள பொருளுக்கும் இடையே உள்ள கால மாறுதல்களை (Time Dilation) அதன் திசை வேகத்தை வைத்து கணக்கிடகூடிய ஒரு சூத்திரத்தை பயன்படுத்தினர், அது loretz factor என்று அழைக்கப்படுகிறது. இதை கொடுக்கப்பட்ட இறை வசனங்களுக்கு பொருத்தி பாப்போம்.

                   
            Δt’- நாம் கணக்கிட கூடிய கால அளவு (நிலையாக உள்ள பொருள்)
            Δt  - நகரும் பொருளின் காலம்
             V   - திசைவேகம் (நகரும் பொருளின் வேகம்)
             C   - ஒளியின் வேகம் (299,792,458 மீட்டர்/செகண்ட் = 1C) 

உதாரணமாக நகரும் பொருளின் காலம் 1 நாள் என்பதாக வைத்துக்கொள்ளுங்கள், அதன் திசை வேகத்தையும் ஒளியின் வேகத்தையும் வைத்து மேற்கண்ட சமன்பாட்டை செய்தால் பூமியில் நிலையாக உள்ளவரின் காலம் வந்துவிடும்.

                                 Δt’= 1/ (1-(299792457.9988748489258802)2 / (299792458) 2)1/2

சமன்பாடுகள் செய்ய கடினமாக இருப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிக்கு சென்று Input கொடுத்தால் உங்களுக்கு விடை கிடைக்கும்.

Time dilation:

பொதுவாக அரை மடங்கு (.5C) ஒளியின் வேகத்தில் செல்லும் பொருளுக்கும் கூட கால மாறுதல்கள் தோராயமாக ஒன்றரை மடங்காக இருக்கும், அதுவே ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க அதன் கால மாறுதல்கள் வேகமாக அதிகரித்து, ஒரு பொருள் ஒளியின் வேகத்தை அடைந்து விட்டால், அந்த பொருளுக்கு காலம் என்பதே நின்று விடுகிறது. கீழே உள்ள படத்தில் மாற்றங்களை காணலாம்.

                                                   
ஒரு நாள் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்கிற போது, ஆண்டுகளையும் முதலில் நாட்கணக்கில் கொண்டுவருவோம்.
       
        1000 ஆண்டுகள் = 365000 நாட்கள்
        T என்பதில் 365000 என்பதை இட,  

பிரயாணத்தின் போது ஒரு நாள் என்பது,  0.9999999999962469 C என்ற ஒளி வேகத்தில் பயணித்தால் பூமியில் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகளுக்கு (365000~ நாட்கள்) சமமாக இருக்கும் என்பது உறுதியாகிறது.

ஆயிரம் ஐம்பதாயிரம் என்று இருவேறு மாதிரி வசனங்கள் கூறுவதால், குறிப்பிடப்பட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகள் என்பது கவனிக்கத்தக்கது,  0.9999999999962469 C என்ற ஒளி வேகத்தில் பயணித்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமமாகும் என்கிறபோது, அதைவிட ஐம்பது மடங்கு அதிகமாக காலம் மாறுகிறது எனில் ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் பயணித்தால் மட்டுமே சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம், அதுதான் இல்லை. வெறும் சில மில்லிமீட்டர் அளவு வேகத்தை அதிகபடுத்த அதன் கால மாறுபாடு ஐம்பதாயிரம் என்று ஆகிறது.

        50000 ஆண்டுகள் = 18250000  நாட்கள்
        T என்பதில் 18250000  என்பதை இட,  

பிரயாணத்தின் போது ஒரு நாள் என்பது வெறும் சில மில்லிமீட்டர் வேகத்தை அதிகரித்து அதாவது 0.9999999999999984 C  என்கிற வேகத்தில் பயணித்தால் போதும், அது பூமியில் கணக்கிடகூடிய ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு சமமாக இருக்கும் என்பதையும் அறிய முடியும். மேலே குறிப்பிட்ட இணையத்தில் சென்று நாட்களையும் வேகத்தையும் சரியாக அளந்து கொள்ளலாம்.

ஆக தற்போதைய அறிவியலின் படி ஒரு ஒளி அல்லது ஒளியின் ஆன்மா ஒளிக்கு இணையான 99.999...% வேகத்தில் செல்வது சாத்தியமே, 99.999… அந்த வேகத்தில் செல்ல முடியும் என்பதை இறை வேதம் பறைசாற்றுகிறது என்பதை ஒப்போகொள்கிரீர்களா என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

நாம் கூறாமல் விட்ட மற்றொரு வசனமான 32:5 ல் ஒரு நாள் அனைத்து பொருள்களும் முடிவில் அவனிடத்தில் திரும்ப செல்லும் என்றும் செல்லக்கூடிய (நகரும் பொருளின்) அந்த நாளின் அளவு ஆயிரம் ஆண்டுகளுக்கு இணையாக இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றான்.

அனைத்து பொருள்களும் என்று இவ்வசனத்தில் குறிப்பிடபட்டுள்ளது, அனைத்து பொருள்களும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இணையான அளவுள்ள வேகத்தில் பயணிக்க போவதாக குறிப்பிடுவது விசித்திரமாக இருக்கிறது என்று சிந்திக்கிறீர்களா... அதை பற்றியும் பார்க்கலாம்.


பிரபஞ்ச உருவாக்கத்தை பற்றி விவரிக்கும் பிக் பாங் கொள்கை, பிரபஞ்சம் உருவாகும் பொது அது விரிவடையும் விகிதம் ஒளியின் வேகத்தை விட அதிகமாகவோ அல்லது அதற்கு இணையான வேகத்திலோதான் விரிவடைந்த தாக கூறுகிறது. சார்பியல் விதிகளுக்கு எதிராக இருக்கிறதே என்று என்ன வேண்டாம், பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் தான் ஒளி வேகத்தில் செல்லாது ஆனால் வெளியோ ஒளி வேகத்தில் விரிவடையும் என்கின்றனர் அறிவியலாளர்கள். வெளி விரிவடைவது உறுதியும் செய்யப்பட்டுள்ளது. இதை எட்வின் ஹப்ல் (Edwin hubble)என்ற விஞ்ஞானி டோப்ளர் எபக்ட் (Doppler Effect) மூலம் விளக்கினார்.

அதே போல விரிவடைந்த பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு  அதன் வேகத்தை குறைத்து விரிவடையும் உச்சத்தை அடையும், பிறகு மீண்டும் அதே அழுத்தத்துடன் சுருங்க ஆரம்பிக்கும், விரிவடைந்த அதே வேகத்தில் தான் சுருங்கும், இதை விவருக்கும் விதமாக உள்ளதே பிக் ரிப், பிக் கிரன்ச் ஆகிய கொள்கைகள், அதாவது குர்ஆன் கூறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இணை என்கிறபோது அது ஒளியின் 99.999... %C என்ற வேகத்தில் சுருங்கும்.


(Its expansion will slow down until it reaches a maximum size. Then it will recoil, collapsing back on itself. As it does, the universe will become denser and hotter until it ends in an infinitely hot, infinitely dense singularity.

இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு இணையான அந்த நாள் என்பது வேகத்தையே குறிக்கிறது, அதை பற்றி விவரிக்கும் குர்ஆன் வசனமே இது.

32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.


                                                          தொடரும்....
- உங்கள் தோழன் 

References:

http://webs.morningside.edu/slaven/Physics/relativity/relativity6.html
http://en.wikipedia.org/wiki/Big_Bang
http://ihsasonline.blogspot.com/2011/03/12.html
http://www.onlinepj.com/Test/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/293/
http://senkodi.wordpress.com/2010/08/03/time-space/
http://senkodi.wordpress.com/2010/01/13/about-sky/
http://www.nidur.info/index.php?option=com_content&view=article&id=451:2009-01-26-03-53-15&catid=37:2008-07-26-14-12-36&Itemid=58
http://science.howstuffworks.com/dictionary/astronomy-terms/big-crunch3.htm
http://www.tamilquran.in/t293.php
http://en.wikipedia.org/wiki/Big_Rip
http://iraiadimai.blogspot.com/2010/07/blog-post_11.html

Post Comment

23 Comments:

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
// இப்பிரபஞ்ச இயக்கதிற்காகவே முதலில் விதிகள் உருவாக்கப்பட்டன. விதிகள் இல்லாத பொருள் எப்படி இருக்க, இயங்க முடியும்? விதிகள் இல்லையெனில் பிரபஞ்சமே இல்லை, உயிரினமும் இல்லை, அதற்கு வாய்ப்பும் இல்லை. அப்படியெனில் இயற்பியல் விதிகளை பின்பற்றும் இயற்கையை உருவாக்கியது வேறு ஒரு சக்தியாகத்தானே இருக்க முடியும். //

நிச்சயமாக! அந்த சக்தியை வரையறை செய்வதில் தான் வெற்று அறிவிலை மேற்கொள்கின்றனர் நாத்திக வரையறாக்கள்
தெளிவான கருத்து., ஆய்வு ரீதியான கட்டுரை

எனினும் தம் பதிவுகளே உண்மையானது என்ற ரீதியில் எடுத்துவைக்கும் செங்கோடி போன்றோர்கள் இனியாவது தங்களின் சுய விளக்கத்தை குர்-ஆன் சுன்னாவில் புகுத்தாமல் நாத்திகம் குறித்து தெளிவாக விளக்குவார்களா...?

சகோ கார்பன் கூட்டாளி., மிக நீண்ண்ண்ண்ண்ண்ட்... பதிவாக இருக்கிறது
இரண்டு பகுதிகளாக பிரித்து போட்டிருந்தால் படிப்பதற்கு இன்னும் இலகுவாக இருக்கும்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
நம் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!!

அன்புள்ள சகோ.கார்பன் கூட்டாளி,

தோண்ட தோண்ட அறிவியல் புதையல் - அல்குர்ஆன் என்பதில் ஐயம் உள்ளவர்களுக்கு மேலும் ஒரு மகத்தான விளக்கம் தந்துள்ளீர்கள்.

இப்பதிவில் சார்பியல் கொள்கையும் அதில் தங்கள் இஸ்லாத்தின் பார்வையும் மிகவும் ஆழமாக ஊடுருவி உள்ளது.

மிக அருமையான ஆக்கம் ஒன்றை தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.

தங்கள் உழைப்பிற்கும் மேலோங்கிய அறிவுத்தேடலுக்கும் அதற்கான நற்கூலியுடன் தங்களுக்கு இறைவன் பேரருள் புரிய இறைஞ்சுகிறேன்.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

தோண்ட தோண்ட அறிவியல் புதையல் -அல்குர்ஆன்
மாஷாஅல்லாஹ் ...தலைப்பு அருமை.
தெளிவான விளக்கங்கள்.
வல்லநாயன் நற்கூலியை தந்தருள்வானாக!

சகோ நீங்கள் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை என் நினைக்கிறேன். அதலால் நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை.

உம்மத்தில் இந்த பதிவை வெளியிட்டு தமிழ்மணத்தில் இணைக்கவும்.

Unknown said...

//எனினும் தம் பதிவுகளே உண்மையானது என்ற ரீதியில் எடுத்துவைக்கும் செங்கோடி போன்றோர்கள் இனியாவது தங்களின் சுய விளக்கத்தை குர்-ஆன் சுன்னாவில் புகுத்தாமல் நாத்திகம் குறித்து தெளிவாக விளக்குவார்களா...? //

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ. குலாம்,

பொதுவாக பரிணாம வாதிகளிடம் ஒரு கேள்வியை கேட்டால், அவர்களிடம் பதில் இல்லையெனில் அவர்களுடைய பாதையை திருப்பி வேறு ஒரு ரூட் சென்று விடுவர், ஆனால் நாம் சகோ.செங்கொடியிடம் பரிணாமம் குறித்து கேட்ட கேள்வியில், அதிகபட்சமாக பரிணாமம் என்பது பிழையுடன் உள்ளது என்பதை அவரே ஒப்பு கொண்டார், அவரின் பதிவின் பின்னூட்டங்களை பார்த்தல் புரியும்.

//சகோ கார்பன் கூட்டாளி., மிக நீண்ண்ண்ண்ண்ண்ட்... பதிவாக இருக்கிறது
இரண்டு பகுதிகளாக பிரித்து போட்டிருந்தால் படிப்பதற்கு இன்னும் இலகுவாக இருக்கும்//

சரிதான் சகோ. தொடராக போட வேண்டும் என்றே நினைத்தேன், அது அனைவரையும் சென்றடையுமா என்ற சந்தேகம் வரவே, முடிந்த அளவு சுருக்கி ஒரே பதிவாக போட்டுவிட்டேன், இருப்பினும் நபியவர்களின் விண்வெளி பயணம் குறித்து வரும் பதிவுகளில் இடலாம் இன்ஷா அல்லாஹ்.

Unknown said...

உங்களின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக,

//தோண்ட தோண்ட அறிவியல் புதையல் - அல்குர்ஆன் என்பதில் ஐயம் உள்ளவர்களுக்கு மேலும் ஒரு மகத்தான விளக்கம் தந்துள்ளீர்கள்.//

போதுமான விளக்கமாக இருக்குமென நினைகிறேன், ஐயம் இருப்பின் அடுத்த பதிவில் போட்டு விடுவோம் இன்ஷா அல்லாஹ்.

//மிக அருமையான ஆக்கம் ஒன்றை தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.

தங்கள் உழைப்பிற்கும் மேலோங்கிய அறிவுத்தேடலுக்கும் அதற்கான நற்கூலியுடன் தங்களுக்கு இறைவன் பேரருள் புரிய இறைஞ்சுகிறேன்//

அல்ஹம்துலில்லாஹ், நன்றி சகோ.

Unknown said...

//சகோ நீங்கள் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை என் நினைக்கிறேன். அதலால் நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை.

உம்மத்தில் இந்த பதிவை வெளியிட்டு தமிழ்மணத்தில் இணைக்கவும்//

வ அலைக்கும் அஸ்ஸலாம்,

நன்றி சகோ. தமிழ் மனத்தில் இணைத்து விட்டேன், மேலும் உம்மதிலும் இணைதாகிவிட்டது, இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவரும்.

Anonymous said...

Assalamu Alaikum,

Alhamdulillah!

Maasha Allah for this beneficial article. Jazakallahu Khair!

Do we have this article in english?

This will help a wider audience to benefit from the contents insha Allah!

அரபுத்தமிழன் said...

JazaakkALLAHu khairan for this wonderful article.
May ALLAH accept your effort of Deen

Rabbani said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சகோ
சார்பியல் கொள்கையையும் அது சம்பந்தமான இறைவசனங்களையும் மிக துல்லியமாக தொடர்புபடுத்தி அருமையான பதிவை தந்துள்ளீர்கள். நம்பிக்கையாளர்களுக்கு நாம் நம்பும் வசனங்கள் அறிவியலுக்கு முரண்படவில்லை என்பதை துல்லியமாக இப்பதிவு எடுத்துரைக்கிறது.
Δt’= 1/ (1-(299792457.9988748489258802)2 / (299,792.458) 2)1/2
இச்சமன்பாட்டில் சிறிய பிழை இருப்பதாக எனக்குப்படுகிறது சகோ. ஏனெனில் v யில் m / s unit உள்ளது ஆனால் c யில் அது km / s குறிபிடப்பட்டுள்ளது c யிலும் m / s unit அதாவது 299,792 ,458 என வர வேண்டும்.மேலும் தொடர்ந்து 1000 வருடங்களுக்கான நாட்களின் எண்ணிக்கை 365000 அல்ல லீப் வருடங்களை சேர்த்தால் 365250 நாட்கள் வரும் இதை T என்பதில் பொருத்திப்பார்த்தால் வேகம் 0 . 9999999999962521 c வருகிறது இந்த வேகத்தில் பயணித்தால் 1000 வருடங்களுக்கு சமமாகும் இது போல் 50000 வருடங்களுக்கு நிகரான 18262500 நாட்களுக்கு வேகம் சரியாக
0 . 9999999999999984 c வருகிறது. நல்லதோர் பதிவைதந்தமைக்கு JazaakkALLAHu khairan இப்படி அறிவுப்பூர்வ பதிவு எவ்வளவு நீளம் போட்டாலும் சலிக்காது.

Unknown said...

wa alaikkum assalam,

brother anony.

You may find regarding relativity with islam in internet, but i dont find anywhere mentioning the formulas. hope insha allah any of our friends will translate it to english.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் அரபுத்தமிழன்.

thank you very much for your valuable comment and encouragement.

I am requessting you to forward this to your friends.

jazakallaah khair.

Unknown said...

வா அலைக்கும் அஸ்ஸலாம்,

சகோ. ரப்பானி,

//இச்சமன்பாட்டில் சிறிய பிழை இருப்பதாக எனக்குப்படுகிறது சகோ//

சரிதான் சகோ.குழப்பம் வேண்டாம் என அனைத்தையும் மீட்டருக்கு ஆக்கிவிட்டேன், தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி,சரிசெய்ய பட்டுவிட்டது.

//மேலும் தொடர்ந்து 1000 வருடங்களுக்கான நாட்களின் எண்ணிக்கை 365000 அல்ல லீப் வருடங்களை சேர்த்தால் 365250 நாட்கள் வரும் இதை T என்பதில் பொருத்திப்பார்த்தால் வேகம் 0 . 9999999999962521 c வருகிறது இந்த வேகத்தில் பயணித்தால் 1000 வருடங்களுக்கு சமமாகும் இது போல் 50000 வருடங்களுக்கு நிகரான 18262500 நாட்களுக்கு வேகம் சரியாக
0 . 9999999999999984 c வருகிறது.//

லீப் வருடங்கள் என்பது கிரிகோரியன் கால அட்டவணையில் உள்ளது, நபியவர்களின் காலத்தில் உபயோகிக்க பட்டது ஜூலியஸ் கால அட்டவணையாக இருக்கும் என நினைக்கிறேன், எந்த காலண்டராக இருந்தாலும் அரைநாளுக்கு மேல் வித்தியாசம் இருக்கவில்லை.அதனடிப்படையிலேயே ~ சிம்பல் பயன்படுத்தி உள்ளேன்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ. தொடர்ந்து படியுங்கள்.

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

மாஷா அல்லாஹ்...என்னவொரு அருமையான பதிவு. நீண்ட நாட்களுக்கு பிறகான காந்திரமான பதிவு. அல்ஹம்துலில்லாஹ்...

தொடருங்கள்...உங்களுக்கு மென்மேலும் கல்வி அறிவை கொடுக்க இறைவன் போதுமானவன்....

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Unknown said...

வ அலைக்கும் அஸ்ஸலாம்.

சகோ. ஆஷிக் அஹ்மத்,

அல்ஹம்துலில்லாஹ்... தங்களின் ஆதரவிற்கும் உதவியிற்கும் நன்றி, உங்களை போன்றவர்களின் ஊக்கங்கள் மென்மேலும் பல பதிவுகள் இட அடித்தளமாக இருக்கும்.

நமது நாத்திக சகோ. யாரையும் காணோமே என்றுதான் வருத்தமாக உள்ளது.

Aashiq Ahamed said...

வ அலைக்கும் சலாம்,

சகோதரர் பைசல்,

///நமது நாத்திக சகோ. யாரையும் காணோமே என்றுதான் வருத்தமாக உள்ளது///

அதாவது..அதாவது...வேணாம் விடுங்க. :) :)

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Rawanan said...

@ கார்பன் கூட்டாளி

///நமது நாத்திக சகோ. யாரையும் காணோமே என்றுதான் வருத்தமாக உள்ளது///

see,
http://pagadu.blogspot.com/2011/09/blog-post_16.html

Anonymous said...

நண்பர் கார்பன் கூட்டாளி,

பிளாக்கரில் சற்று நீளமான பின்னூட்டத்தை இடமுடியாது என்பதாலும், குறித்த இடுகையில் அதன் மறுப்பையும் அறிமுகம் செய்வது தான் சரியாக இருக்கும் என்பதாலும், இந்த இடுகையின் சுட்டியுடன் என் விளக்கத்தை “காலவெளியில் சிக்கிக்கொண்ட அல்லா” எனும் கட்டுரையிலேயே பதிவு செய்திருக்கிறேன்.

http://senkodi.wordpress.com/2010/08/03/time-space/#comment-5848

காண்க.

ஏம்.ஷமீனா said...

Dear brother Faisal,
Assalaamu alikkum wa rahmatullahi wa barakatuh,
Masha'allah, what an interesting article !!!!

May ALLAh(swt) reward you for your good deed...ameen...

your sister,
M.Shameena

Unknown said...

sister shameena.

wa alaikum assalam varah

thank u very much for your valuable comment and encouragement.

hope keep reading my articles...

சமுத்ரா said...

நண்பர். ஆஷிக் . அவர்களிடம் கேட்ட கேள்வியையே உங்களிடம் கேட்கிறேன்.
குர்-ஆனில் சார்பியல் கொள்கை இருக்கிறது என்றால் அதை ஏன் யாரும் ஐன்ஸ்டீனுக்கு முன்னேயே சொல்லவில்லை? இப்படி அழகழகான
கற்பனைகளை ஐன்ஸ்டீன் தியரி பிரபலமாகி பட்டி தொட்டியெல்லாம் பரவிய பின் ஏன் சொல்கிறீர்கள்? அப்படியென்றால் குர்-ஆனில் இருக்கும் மற்ற அறிவியல் பொக்கிஷங்களை (ஸ்ட்ரிங் தியரி, அதிக பரிமானங்களுக்கான குறிப்புகள் இவை)
இப்போதே சொல்லி விடுங்கள். யாராவது scientist கண்டுபித்த பிறகு இவை குர்-ஆனில் ஏற்கனவே இருக்கிறது என்று உங்கள் கற்பனைகளை
எடுத்துக் கொண்டு வராதீர்கள்.

Unknown said...

//குர்-ஆனில் சார்பியல் கொள்கை இருக்கிறது என்றால் அதை ஏன் யாரும் ஐன்ஸ்டீனுக்கு முன்னேயே சொல்லவில்லை? //

முஸ்லீம்களுக்கு தெரியவில்லை. தெரிந்தால் தான் கூறி இருப்பார்களே.

நீங்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது சார்பியல் கொள்கையை கண்டுபிடித்த பிறகு தானே அப்படி என்றால் என்ன என்று கூற முடியும். அதற்கு முன் எவ்வாறு கூற முடியும். அதே போன்றே குர்ஆனை பார்த்துவிட்டு விளங்காமல் இருந்திருகின்றனர்.

//இப்படி அழகழகான
கற்பனைகளை ஐன்ஸ்டீன் தியரி பிரபலமாகி பட்டி தொட்டியெல்லாம் பரவிய பின் ஏன் சொல்கிறீர்கள்//

ஹாஹா. கற்பனை!! இயற்பியல் பற்றி பேசும் உங்களிடம் 50000 ஆயிரம் ஆண்டுகள் சமமான ஒரு நாள் இருக்கிறது என்று கூறினால் சோதிக்காமல் கூட கற்பனை என்று கூறுவீர்களா, உனக்கு எப்படி இந்த விஷயம் தெரியும் என்று சோதிப்பீர்களா???

//அப்படியென்றால் குர்-ஆனில் இருக்கும் மற்ற அறிவியல் பொக்கிஷங்களை (ஸ்ட்ரிங் தியரி, அதிக பரிமானங்களுக்கான குறிப்புகள் இவை)
இப்போதே சொல்லி விடுங்கள். //

தினமும் தேடி கொண்டு தான் இருகிறார்கள். இதற்கான பல ஆராய்ச்சிகள் நடத்துகின்றனர், இருக்கலாம்.

//யாராவது scientist கண்டுபித்த பிறகு இவை குர்-ஆனில் ஏற்கனவே இருக்கிறது என்று உங்கள் கற்பனைகளை
எடுத்துக் கொண்டு வராதீர்கள்.//

நாங்கள் கூறுவது தன் பிரச்னை என்றால் நீங்களே தேடி பாருங்கள் அது சரியா என்று.

அம்ஸ்டோர்டாம் எதாவது கூறினால் இவர் தீர்க்க தரிசி என்று கூறுகிறீர்கள், மாயன் மக்கள் எதாவது எழுதி வைத்திருந்தால் சரியாக இருக்குமோ என்று பார்க்கிறீர்கள், ஆனால் குர்ஆனில் இருக்கிறது என்றால் கோபம் வருகிறது ஆய்வு கூட செய்யாமல் கற்பனை ஏற்று கூறிவிடுகிரீர்கள்.

உங்களுக்கு யோசிக்கும் திறன் உண்டல்லவா? எதற்காக ஆயிரம் ஆண்டுகளுடன் ஒரு நாளை சம்பந்த படுத்த வேண்டும் என்று யோசித்திருக்கிறீர்களா?

நீங்கள் அதை ஆராய்ந்து பார்க்காமல் கற்பனை என்று ஒரே வார்த்தையில் எவ்வாறு கூறுவீர்கள்.?? மத புத்தகங்கள் அனைத்தும் கற்பனை என்ற என்னமா?

kk said...

சமயங்களில் உள்ள புனித நூல்களில்,புராணங்களில் கடவுளின் புகழ் பரப்புவதற்கு பல அதிசயங்கள் கூறப்பட்டிருக்கும் இந்து சமயத்தில் பல இருக்கின்றது செங்கட்டியை பொன் கட்டியாக்கினார் அது இதுவென்று..இவற்றைக்கூறி மக்களை ஆச்சரியத்திற்குட்படுத்தி மக்களால் முடியாதவற்றை சமயம் செய்கின்றது என காட்டி சமயத்தை பரப்பும் முயற்சிகள் அவை ஆனால் தற்போது இவற்றை சொன்னால் கேள்விகேட்பார்கள் சோ அவை தோற்றுப்போயின எனவே இருக்கவே இருக்கு ஒரு வழி பைபிளில் விஞ்ஞானம் பிரபஞ்ச ரகசியம்,குர்ரானில் ரகசியம் என்று இப்போது புதிதாக் கிளம்புகிறார்கள்.உங்களது போஸ்டில் விஞ்ஞான விளக்கங்கள் உள்ளன ஆனால் குர்ரான் தொடர்பான கருத்துக்களை அவற்றோடு இணைத்ஹ்டுவிடுகின்றீர்கள்...என்னைப்பொறுத்தவரை விஞ்ஞான வளர்ச்சியின் முன் சமயங்கள் ஈடுகொடுக்கமுடியாது என்ற உங்களது பயம்தான் குர்ரானுக்கு விஞ்ஞான விளக்கம் தேடவைத்துள்ளது..ஏனெனில் நீங்கள் குர்ரானை மாற்றமுடியாது இதே நிலைதான் பைபிளிற்கும்..
கொடுமை என்னவெனில் இவை எல்லாம் குர்ரான் ,பைபிள் போன்றவற்றில் கூறப்பட்டுள்ளது என கூறுகின்றீர்கள் உலகத்தில் எங்கேயாவது குர்ரான் விஞ்ஞானம் என ஒரு பாடத்தை கற்பிப்பார்களா? ஒருவேளை அரேபிய நாட்டில் செய்வார்கள் அவர்கள் இன்னும் அதைத்தான் செய்யவில்லை..

நாஸாவோ,அல்லது ரஷ்யாவோ அல்லது சீனாவோ வேறு நாடிகளில் உள்ள எந்த சயின்ஸ்டிஸ்ட் ஆவது குர்ரானையோ பைபிளையோ ஆராய்ச்சிக்குட்படுத்துங்கள் என கூறி அவற்றை ஆராய்கின்றானா?சயின்டிஸ்ட் சமய நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கலாம் அது அவர்களது தனிப்பட்ட விடயம் ஆனால் சயன்ஸுக்கு பரிசோதனை ஆதாரங்கள்தான் தேவை குர்ரானை வைத்து என்ன பரிசோதனை செய்யமுடியும் என்கிறீர்கள்?எந்த சமய நூலையும் வைத்து எந்த பரிசோதனையும் செய்யமுடியாது புளொக்கரில் நாம் இவற்றை பற்றிவிவாதிக்க முடியும் நிஜ உலகில் குர்ரான் சமய புத்தகம் என்பதைத்தவிர சயன்ஸுகு அது உதவப்போவதில்லை...பரிணாமம் பிழையாகவே இருக்கட்டும் இன்னொரு விதி கண்டுபிடிக்கப்படும்..கடவுள்தான் உருவாக்கினார் என்றால் எமக்கு ஆதாரம் வேண்டும் எழுத்துக்களைக்கொண்ட புத்தகம் ஒரு ஆதாரமாக கொள்ளமுடியாது..பரிணாமத்தில் சடுதியாக உயிர் தோன்றியதாக எச்சங்கள் ஆதாரங்களை தெரிவிக்கின்றன என ஒரு சமய்வாதி கூறினார் விண் கற்களில் இருந்து உயிர்வந்தது என்றும் ஒரு கொள்கை இருக்கு இது பரிணாமத்தை பிழையாக்கினால் அந்த் கொள்கை வெற்றிபெற்றுவிடும்..அது பிழைத்தால் இன்னொன்று எமக்கு தேவையெல்லாம் 5 புல அறிவால் உணரக்கூடிய ஆதாரங்கள்.அவ்வளாவுதான்...

சமயம் அழிந்துவிடும் அல்லது மறுக்கப்பட்டுவிடும் என்ற உங்கள் ஆழ்மனப்பயம்தான் இவ்வாறான விஞ்ஞானக்கோட்பாடுகளுடன் இணைந்த போஸ்ட்களினூடாக வெளிப்படுகின்றது என் நான் நினைக்கின்றேன்..இவற்றை நீங்கள் கூறுவதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கலாம் ஆனால் இவற்றைத்தவிர இவற்றால் வேருபயன் நான் அறியேன்...நான் உங்களது போஸ்ட்களை படிக்க இருக்கின்றேன் ரீஸன் எனக்கு சில விஞ்ஞான விளக்கங்கள் தேவை அவ்வளவுதான்...சமயம் மனித உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயம்..ஒருவனுக்கு அது ஊக்கியாக தொழிற்படும் என்றால் சமயம் நிலைத்திருக்கட்டும் அறிவியல் என்பது ஒருவனது(சாதாரண/பாமரமனிதன்) அக ஊக்கியாக தொழிற்படாது நீங்கள் அறிவியலின் துணை கொண்டு சமயத்தை பரப்புவதைத்தவிர்த்து...குர்ரானில் உள்ள நல்ல விடயங்களை தெளிவாக எடுத்துக்கூறுங்கள் நான் ஒரு இந்து ஆனால் குர்ரானில் என்ன இருக்கின்றது என அறிய ஆசைதான் ஆனால் சொல்லாடல்களில் உள்ள கஸ்ரம் படிப்பதை தள்ள்ப்போடுகின்றது இலகு தமிழ்/அழகு தமிழில் அவற்றை வெளியிடுங்கள் இப்படியானவற்றை செய்யுங்கள் தவிர சமயத்துடன் இணைத்து விஞ்ஞானக்கருத்துக்களை போடுவது உங்களை சார்ந்த சமயத்தவர்கள்,உங்களுக்கு மட்டுமெ மகிழ்ச்சியை ஏற்படுத்தும்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment